Saturday, November 13, 2010

மைனாக்குஞ்சு

மைனா - ஜூராஸிக் பார்க் படத்தில் வேன் விபத்தில் சிக்கி முன் பக்க கண்ணாடியில் விழுந்து கிடக்கும் பெண்ணை காப்பாற்றும் போது கொஞ்சம் கொஞ்சமாக கீறல் விழும். கடைசியில் பையைப் பிடித்து தப்பி விடுவார். இந்த காட்சியை எல்லாம் சுந்தர்.சி சின்னா படத்தில் சுட்டு விட்டார்.பிரபு சாலமன் லேட்டஸ்டாக அதை சுட்டிருக்கிறார்.இதை உலக சினிமாவின் வரிசையில் கண்டிப்பாக சேர்த்து விட வேண்டும்.

பிரபு சாலமனின் வழக்கமான கிளிஷே தான் மைனா.கொக்கி,லீ,லாடம் என்ற அவர் முந்தைய படங்களில் படத்தின் இறுதி காட்சியில் கொத்து கொத்து ஆட்களை சாகடிப்பார்.இந்த படமும் விதிவிலக்கல்ல.

கொக்கி,லீ,லாடம் படம் எல்லாம் நான்கு முதல் அதிகபட்சமாக பதினாறு நாட்களிலேயே முடிந்து விடும்.இதிலும் அதே தான்.இரண்டு நாட்கள்.

போன டிசம்பரில் எழுதியது மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை அதே சாயலில் இருக்கும் படங்களை எடுத்தால் மக்களுக்கே புரியாது.உதாரணத்திற்கு நாவரசு கொலையில் தண்டனை பெற்ற ஜான் டேவிட் எங்கே என்றால் தெரியாது.அந்த சமயத்தில் படம் சூடாக இருக்க வேண்டும்.புது மாதிரியான படம் என்று ஆதரவு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஆண்-பெண் இவர்களுக்கு நடுவில் இருக்கும் ஈகோ இதை வைத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படம் எடுத்து வெற்றி பெறலாம்

2000 - விஜய்,ஜோதிகா நடித்த குஷி.ஸ்கீரின் இத்து போகும் அளவுக்கு எக்கோ இல்ல அகம் பிடிச்ச கழுத இல்ல ஏதோ ஒண்ணு.இதை நூல் பிடிச்சி எடுத்தது தான் அதற்கு பிறகு வந்த படங்கள்.

2003 - திருடா திருடி.

2005 கடைசியில் லைலா பிரசன்னா நடித்த கண்ட நாள் முதலாய்.

2009 தொடக்கத்தில் சிவா மனசுல சக்தி.

2012 இந்த உலகம் அழியும் முன்னாடி எந்த படம் வரும் என்று பார்ப்போம்.


இப்போதும் அதே மூன்று வருட இடைவெளி தான்.2007 - பருத்தி வீரன்.2010லில் - மைனா. கொஞ்சம் தான் வித்தியாசம் இங்கு நாயகிக்கு படிப்பு வருகிறது. இரண்டு குடும்பத்திற்கும் முதலிருந்தே பகையில்லை. ஆனால் ஒரு இத்துப் போன பிளாஷ்பேக் இருக்கிறது. இதற்கு எல்லாம் தீர்வாக 2013லில் மைனாவின் நீட்சியாக பருத்தி வீரனால் பாதிக்கப்பட்ட விஜய.டி.ராஜேந்தர் எடுக்கும் ஒரு தலை காதல் அல்லது கருப்பனின் காதலி இருக்கும்.அதோடு இந்த உலகம் அழிந்து விட வேண்டும்.

இப்படி எழுதி நண்பருக்கு எழுதி படித்து காட்டினால் "பருத்தி வீரன் படத்தில் தலையில் ஆணி பாயும்.இதில் காலில் பாய்ந்து விட்டது..அதுல ரேப்..இதுல அடி உதை ஆனா அதே நாலு பேர் எண்ணிக்கை என்று சொல்கிறார்.அடிங்க நீ எல்லாம் ஏண்டா விமர்சனம் எழுதாமல் இருக்கே.

இன்னும் டைனமோ வெளிச்சத்தில் படிப்பு,பூ மலர்வது எல்லாம் சொல்லணும்னு ஆசை தான்.வேணாம் எல்லோருக்கும் பிடிச்சதை பிடிக்கலைன்னு சொல்லக்கூடாதாம்.அதனால விட்டுருவோம்.

எனக்கு சினிமாவின் சூட்சுமம் தெரியவில்லை என்று சொல்லி என் அண்ணன் சினிமாவெல்லாம் உனக்கு லாயக்குப்படாது என்று சொல்லி விட்டார்.ப்ளீஸ் ஒரு உதவி இயக்குனர் சான்ஸ் கொடுங்க.நல்லா டி.வி.டி பார்த்து சினிமா எடுக்கிறது எப்படி என்று தெரிந்து கொள்கிறேன்.

நண்பர் ஒருத்தர் சாட்டில் வந்து ரஜினியே சொல்லி விட்டார்.இந்த படம் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல பதிலுக்கு ரஜினி கேடி படத்தையும் அருமை என்று சொன்னவர் என்று நான் சொல்ல இன்னும் ஆளை காணவில்லை.கண்டுப்பிடித்து தருபவர்களுக்கு பிரபு சாலமனின் அடுத்த கதை என்னவாகயிருக்கும் என்று சரியாக சொல்லி விடுகிறேன்.

இந்த மாதிரி அசட்டுத்தனங்களையும் மீறி படம் பிடித்து விட ஒரு காரணம் போதும்.அது என்ன என்று யோசித்தால் எனக்கு தெரிந்த காரணம் மேக்கப் இல்லாமல் இயல்பான அழகோடு இருக்கும் நாயகிகளாக இருக்கலாம். பருத்திவீரன் பிரியாமணியும்,மைனாவின் அமலா பாலும் வசீகரிக்கிறார்கள். இன்னும் கருப்பனின் காதலி படத்தின் நாயகி மட்டும் தான் மிச்சம்.அதை எல்லாம் பார்க்கும் முன் இந்த உலகம் 2012லில் அழிந்து விட வேண்டும்.

7 comments:

VJR said...

Haha.. nica one. ஆஸ்ட்ரேலியா போயாச்சா?

இரும்புத்திரை said...

ஆமாம் விஜெஆர்

Anonymous said...

Pl remember I asked abt the route to Idyangudi as you are from Thisaiyanvilai.

I successfully visited Idayangudi. I travelled by bus from Nagercoil to Uvari. After visiting St Antony's Shrine, I was waiting for bus to Idayagudi.

A jeep picked up people. He charged just Rs 5 and dropped me exactly opp Trinity Church where I was bound.

It was a ten minutes journey. After seeing what I wanted at the Church, I went to Thiysayanvilai, which is another 10 mns drive.

I shall post my travellog in my blog when I open one for travels. and will keep u informed.

Thank you

சங்கர் said...

//நண்பர் ஒருத்தர் சாட்டில் வந்து ரஜினியே சொல்லி விட்டார்.இந்த படம் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல//

யாரு அது, தினேஷா(முகிலன்)? :)

இரும்புத்திரை said...

உவரி சர்ச் எப்படியிருந்தது ஜோ

இரும்புத்திரை said...

தினேஷ் இல்ல..இது பழைய தோஸ்த்..

அகல்விளக்கு said...

நைஸ் ரிவ்யூ....