Monday, November 22, 2010

பழைய கணக்கு

மிஷ்கின் - அமீர் ஆப்பிரிக்கப் படத்தைத் தழுவி எடுத்தார்.இவர் மட்டும் ஜப்பானிய படமான கிகுஜிரோ தழுவாமலா எடுத்து இருக்கிறார்.அமீரின் திருட்டு என்று வெளுத்து எடுத்து இருக்கிறார்.லுங்கியைக் கூட சரியாக கவனித்து இருக்கிறார்(ஞானி "பாசம்").ஆனால் மிஷ்கினை ஒன்றுமே சொல்லவில்லை.

அஞ்சாதே வெளியான சமயத்தில் மிஷ்கினின் பேட்டியில் இருந்து சில வரிகள் - "சித்திரம் பேசுதடி படம் முடிந்தப் பிறகு எனக்கு அடுத்தப் படம் கிடைக்க ஒரு வருடம் ஆனது.அந்த கோபத்தில் நான் முதலில் எடுத்த காட்சி படத்தின் க்ளைமேக்ஸான கறும்பு காட்டில் எடுத்த காட்சிகள் தான்.

ஏற்கனவே அஞ்சாதே படம் பார்த்து வாயை பிளந்து இருந்ததால் அவர் மேல் ஒரு மரியாதையைக் கூட்டியது இந்த பேட்டி.சுப்ரமணியபுரம் படத்தை விட இது சிறந்த படம் என்று இன்று வரை சொல்லி வருகிறேன்.இப்படி படம் கிடைக்காத சமயம் - போராடும் குணமும்.படம் கிடைத்தப் பிறகு அடுத்தவன் கற்பனைத் திருடும் இல்லை தழுவும் குணமும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஆனந்த விகடன் படித்தப் போது அவர் சொன்ன பதில்கள் அவர் மேலிருந்த மரியாதையை முற்றிலும் குறைத்து விட்டது.

ரசிக்கும் எதிரி - ஜப்பானிய இயக்குனர் கிடானோ.(யார் என்று பார்த்தால் கிகுஜிரோ படத்தின் இயக்குனர்).அவரோடு சேர்ந்து நந்தலாலா பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என்று சொல்லியிருக்கிறார்.

என் ஆசையும் அதேதான்.அவருடன் பார்த்தால் அவர் இப்படித்தான் சொல்வார் - இந்த படத்திற்கு நந்தலாலா என்ற பெயரை விட கிகுஜிரோ தான் பொறுத்தமாக இருக்கும்.(கண்ணதாசன் பரிசளிக்கப் போன கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை அவர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.காரணம் அது அவருடைய கவிதை.முயலுக்கு மூன்று கால் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அந்த நபரிடம் சொன்னாராம்.)

அடுத்த கேள்வி யாருக்கும் இதுவரை தெரியாத உண்மை - நந்தலாலா படம் என் சொந்த வாழ்வின் பதிப்பே என்று அளந்து விட்டது.

திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.

கிகுஜிரோவின் கதை - ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தாயைத் தேடி செல்லும் கதை.துணைக்கு ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட முதியவன்.

நந்தலாலாவின் கதை - முதியவனுக்கு பதில் வாலிபன் என்று போடுங்கள்.அட என்ன மாற்றம்.

எழுத்து என்பது எழுத்தாளனின் இரத்தம் என்று சொல்லும் மிஷ்கின் கிகுஜிரோ படம் என்ன ஜப்பானிய இயக்குனரின் கழிவா.(இரத்தம் நமக்கு போனால் தான் இரத்தம்.மற்றவனின் முகத்தில் வழிந்தால் அது தக்காளி சாஸ் போல.)

உங்களுக்காக இரண்டு படங்களின் புகைப்படங்கள்.



அட ஜப்பான் படத்தில் சிறுவன் வலதுப்பக்கம் நிற்கிறான்.நந்தலாலாவில் இடதுப்பக்கம் நிற்கிறான்.(யோவ் விளக்கெண்ண..நம்ம ஊர்ல கீப் லெப்ட்.)

அட ஜப்பான் படத்தில் பேண்ட் இடுப்பில் நிற்கிறது.நந்தலாலாவில் இடுப்பில் நிற்கவில்லை கையில் பிடித்திருக்கிறார்.

அட ஜப்பான் படத்தில் நாயகனின் முகம் பார்க்கிறான்.நந்தலாலாவில் திரும்பி நம்மை பார்க்கிறான்.

அட ஜப்பான் படத்தில் வெட்டவெளி.நந்தலாலாவில் ஒரு மரம் இருக்கிறது.

அட ஜப்பான் படம் வண்ணத்தில் இருக்கிறது(புகைப்படம்).நந்தலாலாவில் கறுப்பு வெள்ளையில் இருக்கிறது.(ஒவியம்).

ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிச்சி சொல்லாமல் இருந்தால் குமுதம் நடுப்பக்கம் என் கனவில் வராதே.

அட ஜப்பான் படம் வெளிவந்து விட்டது.நந்தலாலா இன்னும் வரவில்லை.சரி இது வேண்டாமா அது ஜப்பான்.இது தமிழ்.இதுவும் சரியில்லையா இளையராஜாவின் பெயர் மிஷ்கின் பெயருக்கு முன்னால் வருகிறது.

ஒரு புகைப்படத்தில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் மிஷ்கின் படத்தில் எவ்வளவு காட்டியிருப்பார்.காப்பி அடிப்பவன் அதிக மார்க் வாங்குவது தான் உலக நியதி.அவன் சரக்கையும் சேர்த்து விடுவான்.அதற்காக காப்பி அடிக்கவில்லை என்று அர்த்தமா.

இளையராஜா - சீனிகம் படத்தின் தரத்தையும்,நான் கடவுள் படத்தின் தரத்தையும் இளையராஜா இசை தான் குறைத்து விட்டது என்று சாரு சொல்லியிருக்கிறார்.

இசைக்கு இளையராஜாவை குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடே கிடையாது.காரணம் அவரிடம் சேர்ந்து பணியாற்றும் இயக்குனரை தான் குறை சொல்ல முடியும்.

இளையராஜாவால் தான் என்னால் இந்தி பேசும் மக்களைப் பகடி செய்ய முடிந்தது.சீனிகம் பாடல்களை எல்லோரும் விரும்பி கேட்டப் போது நான் சொன்னேன்.இதெல்லாம் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டது என்று நக்கல் செய்ய முடிந்தது.

நான் கடவுள் பாடல்களை விட,பா படத்தின் பாடல்களை விட நந்தலாலா படத்தின் பாடல்கள் தரம் குறைந்தது தான்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சாபக்கேடு - லூசு பசங்க பாடும் போது மட்டும் கருத்துள்ள பாடல்கள் பாடுகிறார்கள்.

"தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..
தாய் உன்னை காண தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்.."

இப்படி ஒரு பாட்டு இளையராஜாவின் குரலில்.

நான் என் அம்மாவை வருடத்தில் இருபது நாள் தான் பார்க்கிறேன்.பார்த்ததும் இப்படி பாடல் பாட நான் ஒரு லூஸாக மாறத் தயார்.

என்னை கவர்ந்த ஒரே பாட்டு - நரிக் குறவர்கள் பாடல்.

மிஷ்கின் படம் என்பதால் இசை உலகத்தரமாகி விடாது.

இருந்தாலும் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பும் காரணங்கள்.

ட்ரைலர் ஜோசியம் - அந்த பையன் மிஷ்கினை விட நன்றாக நடித்து இருக்கிறான்.அப்ப மிஷ்கின் - அமீரை விட நன்றாக நடித்து இருக்கிறார்.

கடைசி இருபது நிமிடங்கள் - வசனம் கிடையாது பிண்ணனி இசை மட்டும் தான்.

ரோகினி - மொட்டை அடித்துக் கொண்டு மிஷ்கினின் தாயாக நடித்து இருக்கிறார்.(இது மிஷ்கினின் இடைச்செருகலாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.)

இளையராஜா காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் கொடுத்தார் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாரதிராஜா,பாலு மகேந்திரா மற்றும் மணிரத்னம் தான்.அப்படி நந்தலாலா பாடல்கள் நிற்காது என்பது மட்டும் உறுதி.

5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

யப்பான் படமெல்லாம் பார்க்கும் சாரு இந்த படத்தைப்பார்க்காமலா??மிஸ்கினுக்கு வரிந்து கட்டியிருந்தாரே!
எல்லாமே தகிடு தத்தமாகத்தான் இருக்கு!!!

ரவி said...

as usual i put minus vote. after that i realized this is a good post :)

சங்கர் said...

ஒய் மீள்ஸ்? மஹாபாரதம் எழுது

சரவண வடிவேல்.வே said...

நந்தலாலா திரைப்படத்தை பார்த்த பின் எழுதியிருக்கலாமே??

Marimuthu Murugan said...

http://ninaivagam.blogspot.com/2009/11/blog-post.html