Tuesday, November 16, 2010

பேக் டிராக்கிங்

லேப்டாப் பேக்கை காணவில்லை.பாஸ்போர்ட்,விசா போயிருந்தாலும் பரவாயில்லை. ஆபிஸ் லேப்டாப் போய் விட்டது.அதை நினைத்தால் இன்னொரு பெக் அடிக்கலாமா என்று யோசித்தேன். பல கோடி மதிப்புள்ள பிராஜக்ட் போன மாதிரி பில்டப் குடுப்பானுங்க.இத்துப் போன லேப்டாப் போனதற்கு இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கீங்களே உங்களால எப்படி ஒரு டீமை லீட் பண்ண முடியும்னு சரியா அங்கேயே ஆப்பு வைப்பாங்க.இருந்தாலும் இவ்வளவு குடித்திருக்கக்கூடாது.எல்லாம் அவளால வந்தது. யாரா சரியா போச்சு.எல்லாரும் சேர்ந்து என் தலையிலே கட்டி வைச்சாங்களே அந்த ராட்சஸி தான் காரணம்.

ஏதோ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஆபிஸ்ல பார்ட்டி.எனக்கு பிரமோஷன் கிடைக்கும்னு சொன்னாங்க. வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல வாயிலே ஊத்திட்டாங்க.இதை இவக்கிட்ட சொன்னா ஆமா இவரு பச்சமண்ணு பீடிங் பாட்டில்ல ஊத்தி வாயிலே வைச்சுட்டாங்கன்னு என்னைத் திட்டுறா. இதுக்கும் கொஞ்சம் தாங்க அடிச்சிருந்தேன். அதுவும் வாரத்துக்கு ரெண்டு நாள் அடிச்சிக்கலாம்னு இவ தான் சொன்னா.இப்போ இவளே மீறினா எப்படி.கண்ணம்மா அப்படின்னு கொஞ்சினா கம்முன்னு கிடன்னு சொல்றா.கண்ணாம்மான்னு கெஞ்சினா கம்முன்னா கம்மு கம்முனாட்டு கோன்னு சொல்வா. நான் என்ன இவ வைச்ச ஆளா வர்றதுக்கும் போறதுக்கும். இதுக்கெல்லாம் காரணம் என் அப்பா அம்மா தான். போன் போட்டு இரண்டு ஏறு ஏறலாம்னு பாத்தா ஏண்டா நீ தானே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க அடம் பிடிச்சேன்னு சொல்றாங்க.நான் எப்போ சொன்னேன்.இருங்க தண்ணியடிக்கிறதுக்கு முன்னாடி பார்சல் வாங்க இந்த கடைக்கு தான் வந்தேன்.கேட்டா அப்படி எதுவும் இல்லையேன்னு சொல்றான். தண்ணியடிச்சா எல்லாத்துக்கும் இளக்காரமா போச்சு.

சரி லேப்டாப் பேக் போய் தொலையுது.கல்யாணம் பண்ணிக்கிட்டா பர்த்டே விஷ் பண்ணலை,பிறந்த நாளுக்கு கோயிலுக்கு வரலன்னு எல்லாம் சண்டைக்கு வரக்கூடாதுன்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணினேன்னு நினைக்கிறேன்.அதுவும் சரியா ஞாபகமில்லை.ஆ வந்துரிச்சி. அவ கூட சண்டை போட்டுட்டு பிரபு கூட தான் அவன் கார்ல தண்ணியடிக்க வந்தேன்.அவன் கார்ல விட்டுப்பேன்னு போன் பண்ணினா மச்சான் ஏண்டா என் பொண்டாட்டி கூட சந்தோஷமாயிருந்தா பொறுக்காதா உனக்குன்னு சொல்றான். படுபாவி இதுக்குத்தான் என் கூட வந்து பெப்ஸி குடிச்சியா.ஏண்டான்னு கேட்டா விரதம்னு சொல்றான்.பேக் பத்தி கேட்டா நாளைக்கு சொல்றேன்னு சொல்வான்.

ஆங் எங்க விட்டேன்.பிறந்த நாள்,கல்யாண நாள் எல்லாம் மறந்துறக்கூடாதுன்னு தான் அவ பிறந்த அன்னிக்கே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.தண்ணியடிச்சிட்டு போனா திட்டுவான்னு தான் நேரா பாத்ரூம் போனேன்.அங்க வந்து வழிய மறைச்சிக்கிட்டு நின்னா ஒருத்தனுக்கு எரிச்சல் வராதா. "இன்னைக்கு என்ன நாள்.." இப்படி சம்பந்தமேயில்லாம கேட்டா புதன் கிழமை அதுக்கு என்ன.. வாரத்துல இன்னைக்கு தண்ணியடிக்கலாம்னு நீயே பெர்மிஷன் குடுத்தே தானே.." இப்படி பதில் சொன்னா இதெல்லாம் நல்லா தெரியுமே.. இன்னைக்கு எங்கப்பாவுக்கு கல்யாண நாள்னு சொன்னேனே அது மறந்துரிச்சா.." என்ன சொல்ல ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும். என் கல்யாண நாளே எனக்கு ஞாபகத்துல இருக்காது.பிரபு கார்ல ஏறுறதுக்கு முன்னாடி இங்க இருந்து சிகரெட் பிடிச்சேன்.கடையையும் பூட்டிட்டான்.

கொஞ்சம் தெளிய ஆரம்பித்திருந்தது.ரொம்ப தூரம் நடந்து விட்டேன்.கால் வலி.ஆபிஸ்ல இருந்து வரும் போது இருந்திச்சி.இங்க மறந்து விட்ட மாதிரியும் இல்ல.வீட்டுக்கு போய் தூங்கிட்டு நாளைக்கு தேடுவோம்.ரெண்டாவது தடவை அடிச்சேன்னு தெரிஞ்சா திரும்பவும் சாமியாடுவா.பாத்ரூம் போய் குளிச்சிட்டு சைலண்டா தூங்கிருவோம்.பாத்ரூம் போனா அங்க லேப்டாப் பேக் தொங்குது.

பிரபு கிட்ட சொல்ல போனை அடிச்சேன்."மச்சான் எப்படியா பேக் டிராக் பண்ணிக் கண்டுப் பிடிச்சிட்டேன்.." சொல்லிட்டு திரும்பினா இவ நிக்குறா.

இதை தான் மூக்க சுத்தி காதை தொடுறதுன்னு நக்கல் விடுறா.கோபம் வந்தாலும் அடக்கிட்டேன். இன்னொரு பேக் டிராக்கிங் எல்லாம் என்னால முடியாது.

"உங்கப்பா கல்யாண நாளை நான் மறப்பேனா செல்லம்.." எல்லார் மாதிரியும் நானும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.வேற ஒண்ணுமில்ல பாரை மூடிட்டான்.அங்க போக முடியாது.

முக்கிய குறிப்பு : இந்த கதையில் வரும் எல்லா சம்பங்களும் கற்பனை.அதையும் மீறி யாரையாவது இந்த கதை நினைவு படுத்துற மாதிரி இருந்தா ரப்பர் வைச்சி அழிச்சிருங்க.ரப்பர் இல்லன்னா எச்சில் தொட்டு அழிச்சிருங்க.

2 comments:

நீ தொடு வானம் said...

என்ன கல்யாணமா

அகல்விளக்கு said...

ஷம்டிங் ட்டராங்......