Wednesday, November 10, 2010

அர்ஜூனனின் சந்தேகம்

"நாங்கள் ஐவரும் உனக்கு அத்தை மைந்தர்கள் தான்.ஏன் அவர்களை எல்லோரையும்  விட்டு விட்டு நீயும் நானுமே அதிகம் நட்பு பாராட்டுகிறோமே.உன் தங்கையின் கணவன் என்ற கூடுதல் சலுகையாலா.." என்று கிருஷ்ணருடன் அர்ஜுனன் கேட்கிறான்.

"ஒரு காரியம் நிறைவேறாமலே இருக்கிறது.அதை செய்யவே நீயும் நானும் இங்கு வந்திருக்கிறோம்.நீயும் நானும் ஒன்றே. நானில்லாமல் நீ ஒரு காரியமும் செய்ய முடியாது.." என்று கிருஷ்ணன் விஷமமாக சிரிக்கிறான்.

"நாம் எப்படி ஒன்று ஒரு உதாரணம் தர முடியுமா.."  என்று அர்ஜுனன்  கேட்க

"பெண்கள் விஷயம் ஒன்று போதாதா.." என்று கிருஷ்ணன் சொன்னதும் ஒவ்வொரு முறையும் பெண்கள் விஷயத்தில் காதலில் சிக்கும் பொது கிருஷ்ணன் தான் உதவியிருக்கிறான் என்று நினைத்து பார்க்கிறான். கிருஷ்ணனோ  வேறு கதையை நினைத்து கொண்டிருக்கிறான்.

கர்ணனின் கதையை நினைத்து கொள்கிறான். சஹஸ்ர கவசன் என்றொரு அசுரன் வழக்கம்போல் தவங்கள் செய்து தன் உடலை ஆயிரம் கவசங்கள் காக்கவேண்டும் எனக் கேட்க அவ்வாறே அவன் உடலுக்கு ஆயிரம் கவசங்கள் ஏற்பட்டன. அதனாலேயே அவனுடைய உண்மையான பெயர் நமக்கு இன்னும் தெரியவில்லை. சஹஸ்ர கவசன் என்ற பெயராலேயே தெரிந்து கொள்கின்றோம்.  ஆயிரம் கவசங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், தன்னை எவராலும் கொல்லவோ, வெல்லவோ முடியாது. கடுந்தவம் இயற்றிக் கொண்டு போர் புரிபவர் யாரோ அவர்கள் மட்டுமே கொல்ல முடியும், வெல்ல முடியும் என்றும் வரம் வாங்கிக் கொண்டு விட்டான். யாராலும் ஒன்று தவம் செய்யமுடியும், அல்லது போர் புரிய முடியும். இரண்டும் ஒருசேர யாரால் செய்ய இயலும்? அதுவும் ஒரே நபரிடத்தில்? இனி நம்மை வெல்ல இப்பூவுலகில் மட்டுமில்லை, ஈரேழு பதிநாலு லோகங்களிலும் யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தான் சஹஸ்ரகவசன்.

அனைவரும் காக்கும் கடவுள் ஆன மஹாவிஷ்ணு தான் இதற்கு உதவவேண்டும் என அவரை வேண்ட அவரும் தன்னை இருவேறு வடிவங்களாக மாற்றிக் கொண்டார். ஒரு வடிவம் நரன், மற்றொரு வடிவம் நாராயணன்.

நாராயணன் தவத்தில் ஆழ்ந்திருக்க, நர வடிவில் இருந்த விஷ்ணு சஹஸ்ர கவசனோடு சண்டை போடுவார். பின்னர் நரன் தவம் செய்ய ஆரம்பிக்கும்போது நாராயணன் சண்டை போடுவார்.  இப்படியே தவமும், போரும் மாறி மாறி நடந்து 999 கவசங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. கடைசியாய் ஒரு கவசமும், காது குண்டலங்கலும் இருந்தன. அப்போது நரன் போருக்கு வர, சஹஸ்ர கவசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி சூரியனிடம் தஞ்சம் அடைந்தான்.  அவனின் உண்மையான எண்ணம் புரியாமல் சூரியன் அவனைக் காப்பதாய் வாக்களிக்கப்பின்னர் உண்மை தெரிந்து அவனிடம்,இப்போ உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டால் உன் உயிர் அணுக்களைப் பாதுகாத்துத் தக்க சமயத்தில் பூமியில் பிறக்க வைப்பேன் என்று சொல்வார். அந்த உயிர் அணுக்களோடு தன் சக்தியையும் சேர்த்தே குந்திக்குக் கொடுப்பதால் சூரிய அம்சமாகவே பிறப்பான் கர்ணன்.  தன்னுடைய பரிசாகக் அந்த குண்டலங்களையும் அளிக்கிறார். மிகுந்திருந்த இந்த கவசத்தோடும் குண்டலங்களோடும் குழந்தையாய்ப் பிறந்தவனே கர்ணன் ஆவான். நரன் அர்ஜுனன் ஆகவும், நாராயணன் கண்ணனாகவும் பிறந்தனர்.

மிச்சமிருந்த ஒரு கவசத்தையும் குண்டலத்தையும் இந்திரன் தந்திரமாக கர்ணனிடம் இருந்து பறித்து விடுகிறான்.

பதினேழாவது நாளின் போர் முடிவில் கர்ணன் சாய்க்கப்படுகிறான். பதினெட்டு நாள் போர் முடிந்ததும் தேரை விட்டு இறங்கி ஓட சொல்லும் கிருஷ்ணனை ஒன்றும் புரியாமல் பார்க்கிறான் அர்ஜூனன்.காண்டீபத்தை எல்லாம் எடுத்து கொண்டு வரும் பொது தேர் தீப்பிடித்து எரிகிறது.

எப்படி இப்படி ஆனது என்று கேட்கும் அர்ஜூனனிடம் கர்ணன்,பீஷ்மர், துரோணர் எல்லாம் உன்னை விட வில் வித்தையில் சிறந்தவர்கள்.நானும் அனுமனும் உன் தேரில் இல்லாமலிருந்தால் அவர்கள் விட்ட அம்பு எல்லாம் தேரை  எரிந்திருக்கும் என்று சொல்ல அர்ஜூனனால் நம்ப முடியவில்லை.

காந்தாரியின் சாபத்தாலும்,துர்வாசரின் சாபத்தாலும் துவாரை எரிகிறது.எல்லோரும் அடித்து கொள்கிறார்கள். கிருஷ்ணன் அமைதியாக காட்டில் படுத்திருக்கிறான்.வேடன் மான் என்று நினைத்து அம்பு விடுகிறான். அர்ஜூனன் துவாரகையின் பெண்களை அழைத்து செல்ல வருகிறான். வரும் வழியில் மாடுகளையும் பெண்களையும் திருடர்கள் கவர காண்டீபத்தைக் காட்டி அவர்களை மிரட்டுகிறான்.அவர்கள் அவனை பொருட்படுத்தாமல் போக சண்டை நடக்கிறது.கிருஷ்ணன் இறந்து விட்டதால் காண்டீபம் வேலை செய்யவில்லை.மிக எளிதாக அர்ஜூனன் தோற்கடிக்கப் படுகிறான். கிருஷ்ணன் போன்ற உற்ற நண்பன் இறப்பையும் தாண்டி தோல்வி அவனுக்கு கிருஷ்ணன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற  உண்மையை உரைக்கிறது.அச்தினாப்புரம் வந்து சேர்கிறான்.இந்த உலகத்தை விட்டு போக வேண்டிய நாள் வந்து விட்டது என்று இமயமலை நோக்கி பாண்டவர்களும் திரௌபதியும் நடக்கிறார்கள். கூடவே ஒரு நாயும் சேர்ந்து கொள்கிறது.அது தர்மனின் தந்தையான யமதேவன்.

2 comments:

எல் கே said...

நல்ல கதை

இரும்புத்திரை said...

அடுத்து வேற கதை எழுதுறேன்.