Saturday, July 18, 2009

விஜய் சினிமா - அரசியல்

டி.ராஜேந்தர் ( அடடா பெயர்ல விஜய என்பததை விட்டு விட்டேனே) அவர் உதித்த பொன்வாக்கு தான் ஞாபகம் வருகிறது.

" நான் கொஞ்ச நாள் சினிமா சினிமா என்று பிஸியாக இருந்து கேப் விட்டதால் விஜயகாந்த் அரசியலில் முன்னேறி விட்டார்..."

அப்பொழுது அவர் நான்கு வருடமாக எடுத்து கொண்டு இருந்த காவியம் - வீராச்சாமி.

இந்த வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி போட்டு இருந்தால் அது விஜக்கு பொருந்தும்.

விஜயின் முதல் வெற்றி படம் - பூவே உனக்காக (1996) இந்த பதிமூன்று வருடத்தில் ரஜினி நடித்த படங்கள் ஆறு.

அப்பொழுது கமலும் மருதநாயகம், ஹே ராம், எடுக்கிறேன் என்று ஒரு மூன்று வருடம் வீணடித்து இருந்தார்.

2001 பிறகு கமல் நடித்த படங்கள் ஒன்பது.அதிலும் தசவாதாரம்,வேட்டையாடு விளையாடு மற்றும் விருமாண்டி எடுக்க மொத்தம் அவர்க்கு நான்கு வருடங்கள் தேவைப்பட்டது.

இதில் கமலும்,ரஜினியும் எடுத்த கேப்பினால் விஜய் சரசர என முன்னெறி இருந்தார். ரஜினியை போல "நடித்து நடித்து" முண்ணனி நடிகராக மாறி இருந்தார்.

அந்த் காலக்கட்டத்தில் அஜித்,பிரசாந்த்(இப்போ இவரை நினைத்தால்...) தவிர இளம் ஹீரோக்கள் இல்லாததும் ஒரு காரணம்.

ரஜினி படம் வெளியாகும் பொழுது விஜயின் அடுத்த படம் நிச்சயம் மண்ணை கவ்வி திரையரங்கை விட்டு வெளி ஏறி இருக்கும்.

விஜயின் முதல் வெற்றி 1996 லில் வந்த்தால் அதற்கு அப்புறம் வந்த ரஜினி படங்களை கணக்கில் எடுத்து கொள்வோம்.

வருடம் ரஜினி விஜய்

1997 அருணாச்சலம் (வெற்றி) வசந்த வாசல்,மாண்புமிகு மணவன்(தோல்வி)

1999 படையப்பா(வெற்றி) மின்சாரக்கண்ணா (தோல்வி)

2002 பாபா (தோல்வி) யூத் (தோல்வி)

2005 சந்தரமுகி (வெற்றி) சச்சின் (தோல்வி)

2007 சிவாஜி (வெற்றி) அழகியத் தமிழ்மகன் (தோல்வி)

2008 குசேலன் (தோல்வி) வில்லு (படுதோல்வி)

2009 சுல்தான் (?) ??????????

2010 எந்திரன் (?) ??????????

அப்படி ரஜினி தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து இருந்தால் விஜயின் நிலைமை ??????????

அப்ப் அரசியல்

அங்க யாரும் ரஜினி,கமல் மாதிரி கேப் விட மாட்டார்கள்.

அரசியலை பொருத்த வரை விஜய் ஒரு நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுகம் தான் என்றுமே.

இருக்கிரதை விட்டு விட்டு பறப்பதற்க்கு ஆசைப்பட்டால் உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்று அலைய வேண்டியது தான்.
விஜயின் கேப்பை யாராவது நிரப்பி விடுவார்கள்.

நாளைய தீர்ப்பின் தோல்வியை சரி செய்ய செந்தூர பாண்டி படத்தில் நடித்து விஜயகாந்த் உதவினார்.

அரசியலில் தோல்வி அடைந்தால் நிச்சயம் விஜயகாந்த் உதவி செய்ய மாட்டார்.

கட்சி ஆரம்பிபதற்கு முன்பே விஜயை கண்டு விஜயகாந்துக்கு பயம் என்று விஜயின் நெருங்கிய வட்டாரம் சொல்லி உள்ளது.

விஜய் தந்தை உண்ணாவிரதத்தில் பிரியாணி பற்றி பேசிய அறிவுஜீவி கட்சி ஆரம்பித்தால் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதைஇந்த தமிழ்நாடே யோசித்து பார்க்கட்டும் (விஜயும் சேர்ந்து யோசிப்பார்) ।ஆழம் தெரியாமல் காலை விட இது சினிமா அல்ல। விட்டு விட்டு வந்து போய் இருக்க அரசியல்வாதிகள் எல்லாம் ரஜினி மற்றும் கமல் அல்ல.

4 comments:

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Prathap Kumar S. said...

nalla tharraruya detailu...

இரும்புத்திரை said...

ஐயா ஆப்பு என்னையுமா நான் வரல இந்த ஆட்டத்துக்கு

இரும்புத்திரை said...

உக்காந்து யோசித்து எழுதினேன் விமர்சகன்