Monday, July 27, 2009

சசிகுமாரின் அடுத்த படத்தின் ஹீரோ சாரு நிவேதிதாவா ?

சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா (சசியின் தங்கை) தான் நாயகி. கதைக்களம் சென்னை. விக்ரம் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.படத்தில் சசிகுமாரும் நடிக்கவில்லை.விக்ரமும் நடிக்கவில்லை.கதையின் நாயகனைத் தேடி கொண்டு இருக்கிறார் சசி. நாயகனுக்கு வயது 54. ராம்கோபால் வர்மாவின் நிஷாப்த் படம் போல 54 வயது இளைஞனுக்கும் 18 வயது பெண்ணுக்கும் உள்ள உறவை மையமாக கொண்ட கதைக்கருவாக இருந்தால் சாருவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இது போல முயற்சியை சசிகுமாரை போன்ற சில இயக்குனர்களால் மற்றுமே செய்ய முடியும்.

காரணங்கள் பின்வருமாறு

1. சாருவிற்கு 56 வயதுக்காரர் சசிகுமார் சொன்னதை விட இரண்டு வயது அதிகமானவர் என்று யாரவது சொன்னால் தயவு செய்து முரளியை நினைத்து கொள்ளவும் ( 35 வயதிலும் அவர் கல்லூரிக்கு சென்றவர்.)

2. சினிவாவில் நடிக்க ஆர்வமுள்ளவர். நாடகத்தில் நடித்த அனுபவம் உள்ளவர்.

3.இது ஒரு உறவுச்சிக்கல் கதையாக இருந்தால் மிகவும் பொருத்தமானவர். உறவு சிக்கல் கதைகளை நிறைய எழுதியவர். உதாரணம் குட்டிக்கதைகள் - 108 என்று எழுதி பல சர்ச்சைகள் கிளம்பி பிறகு புத்தகமாக வந்தது .(பத்து புத்தகங்களில் ஒன்றை சசிகுமார் வெளியிட்டார். )

4.கமலின் நடிப்பை கிழித்து தோரணம் கட்டும் சாரு அவரு கதையின் நாயகனாக வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறு நடிப்பை வெளிப்படுத்துவார் என்று பார்க்க வேண்டும்.

5.அவருடைய நடிப்பை விமர்சிக்க ப்ளோக்கர் உலகமே இரண்டு அணியாக திரண்டு நிற்கும். (யப்பா சண்டைய பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்குது).

6.சாருவிற்கு நிஜத்தில் பந்தபாசமே கிடையாது என்று சொல்வார். அவர் படத்திலாவது மிகவும் சோகக்காட்சியில் நடித்து பந்தபாசத்தில் கிடந்து புரள வேண்டும் .

7.அவர் நடித்த படத்தை அவர் எப்படி விமர்சனம் செய்வார்,படத்தின் இசையைப் பற்றி என்ன எழுதுவார் என்று தெரிந்து கொள்ள ஆசை.

8.அப்படி அவர் நடிக்க போய் விட்டால் கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத மாட்டார்.எனக்கும் ஆணி புடுங்க நெறைய நேரம் கிடைக்கும் (எல்லாம் சுயநலம் தான் அப்படியே நல்லா எழுதுற எல்லோரும் கொஞ்ச நாள் எழுதுறத நிறுத்தி விடுங்கள்.(அப்படிவது நாங்க எழுதுற மொக்கைகளை யாராவது படிச்சு பின்னுட்டம் போடுறாங்களான்னு பார்ப்போம்)).

நான் சொன்ன இந்த தலைப்பு உண்மை ஆனால் நாந்தான் முதல்ல சொன்னேன் என்று சுயதம்பட்டம் அடித்து கொள்வேன். அதுவே பொய் என்றால் வதந்தி கிளப்புன முத ஆளா நான் இருந்துட்டு போறேன்.

18 comments:

நாமக்கல் சிபி said...

//நான் சொல்ல இந்த தலைப்பு உண்மை ஆனால் நாந்தான் முதல்ல சொன்னேன் என்று சுயதம்பட்டம் அடித்து கொள்வேன். அதுவே போய் என்றால் வதந்தி கிளப்புன முத ஆளா நான் இருந்துட்டு போறேன்//

ரைட்டு தலைவா!

நாமக்கல் சிபி said...

காரணங்கள் பொருத்தமானவையே!

வில்லங்கம் said...

கொடூரக் கற்பனை !!

துபாய் ராஜா said...

ஏன் இந்த கொலைவெறி ??!!

இரும்புத்திரை said...

thanks cibi,jk,dubai raja

வால்பையன் said...

நான் இந்த பதிவை வழிமொழிகிறேன்!

இரும்புத்திரை said...

valpaiyan avarkal romba naal kaliththu vanthathal avarai vanmaiyaka kandikiren

வால்பையன் said...

ரொம்ப நாள் கழித்து ரசிக்கும்படியான மொக்கை போட்டதால் இந்த வருகை!

இரும்புத்திரை said...

vanmaiyaka kannadikiren endru poda irunthen kai slip aayiruchu

inime adikkadi mokka poduren

ellam unga aaseervathan than valpaiyan

தினேஷ் said...

ஜில் ..

தினேஷ் said...

மிகப்பொருத்தமன ஆளுங்க

Prasanna Rajan said...

ஹா ஹா... செம கலாய்... சாரு நிவேதிதா பற்றி பதிவு போட்டால் ஹிட்ஸ் ஏறும் என்று யாரோ உங்களுக்கு இரகசியத்தை சொல்லி விட்டார்கள் போல் இருக்கிறது.

இரும்புத்திரை said...

thanks sooriyan,prasanna

சென்ஷி said...

சூப்பர் :-)

Jerry Eshananda said...

மொக்கையிலயும் இம்புட்டு ரகசியம் இருக்கா? வந்து வாழ்த்த வச்சுடீக.
அடிக்கடி இப்படி ஏதாவது பண்ணி உங்க ஹிட் ரேட்டையும்,எங்க ஹார்ட் பீட்டையும் எகிற வையுங்க."ஜெரி ஈசானந்தா"-மதுரை

இரும்புத்திரை said...

nandri senshi

nandri jerry

Ashok D said...

உண்மையில் அப்படி நடந்தால் உமது ப்ளாக்குக்கு நாங்கள் ஒரு (atleast) 5ஆயிரம் பேர் followers ஆகிவிடுவோம்.

இப்படிக்கு
சாருவின் ரசிகன் வாசகன்
D.R.Ashok

இரும்புத்திரை said...

ரொம்ப நன்றி டி.ஆர்.அசோக்