Wednesday, July 29, 2009

மாஜி தோழி(காதலி)க்கு ஒரு கடிதம் + கவிதை


அன்புள்ள தோழி(காதலி)க்கு,


ரொம்ப நாள் கழித்து கடிதம் மற்றும் கவிதை எழுதும் காரணம் புரியாமல் நீ யோசிக்கலாம். காரணங்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.(கவிதையை படித்து விட்டு காரணங்களுக்கு போகலாம்)


ஒரு மழைநாளில்
என் வீட்டிலிருந்து உன் வீட்டுக்கு
நாம் கடந்த,நடந்த தூரம்
மூன்று மைல்களாக இருந்தது.
இன்று நினைக்கையில்
அது கடக்க முடியாத யுகங்கள்
மறக்க முடியாத கணங்கள்
கண்ணீர் துளிர்க்கும் தருணங்கள்.
இப்படி செல்வதில் ஒரு வசதி என்றாய்
எப்படி என்றவனைப் பார்த்து
மழை காலடித் தடங்களை
அழித்து விடும் என்றாய்
அன்று முதல்
காயாத சிமென்ட் தளங்களில்
காலடித் தடத்தை பதித்து வருகிறேன்
வீட்டுக்காரன் திட்டுவதை கூட கண்டு கொள்ளாமல்
மேடும்,பள்ளமுமாய் இருந்த சாலையைப் பார்த்து
இப்படித்தான் இருக்குமா என்றேன்
நம் வாழ்வா என்று கேட்ட உன்னிடம்
உன் உடல்.. சொல்லி முடிப்பதற்குள்
சீ என்று விலகினாய்!
நல்ல வனப்பான பெண்ணையோ
குண்டும்,குழியுமாக இருக்கும் சாலையையோ
கடக்க நேர்ந்தால்
நீ கடக்கிறாய் என் நினைவுகளில்
வீட்டிற்கு முப்பது அடி தூரத்திலே
நிறுத்தி விட்டாய் அன்று
தெரியாமல் போய் விட்டது
முடிவிலும் சில அடிகளை உன்னோடு
கடக்க முடியாது என்று .

1.நான் கவிதை எழுதி கொடுத்த பிறகு தான் மூன்று பெண்கள் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார்கள் . யாராவது உன்னிடம் பிரிந்ததற்கு காரணம் கேட்டால் இந்த கவிதை காட்டு.

2.இன்னொரு பெண்ணிடம் பேச முயற்சித்து கொண்டு இருக்கிறேன். நாளைக்கு அவளுக்கும் கவிதை கொடுக்க நேர்ந்தால் இதையே கொடுத்து விடுவேன் (நேரம் மிச்சம் )

3. +1 படிக்கும் பொழுது (நான் தேறவே மாட்டேன் என்று ஊர் உலகமே சொன்ன காலம் அது) கவிதை எழுதினேன் என்று வீட்டில் திட்டினார்கள். இப்போ யார் திட்ட போறாங்க (இந்த மொக்கையை படிப்பவர்களை தவிர)


டிஸ்கி - இது புனைவு என்று சொன்னால் நம்பவா போறீங்க

10 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

spelling mistake athan delete panniten, maththapati mokkari jueprrruuuuuuuu

மகேந்திரன் said...

உங்க கல்யாணத்துக்கு அப்புறமா இப்படி எல்லாம் முயற்சி செய்ய வேண்டாம் அரவிந்த்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழகு.....,

வில்லங்கம் said...

இப்டி கவித போட்டீங்கனா நம்ம நட்புல விரிசல் விழுந்திடும்
(அர)விந்தா !!

இரும்புத்திரை said...

thanks mayil, angel and devil, suresh,jk

இரும்புத்திரை said...

ippo devel after marriage angel

Raju said...

:)

நையாண்டி நைனா said...

கவுஜ தந்த கவுஞ்சர் வாழ்க.

இரும்புத்திரை said...

nandri tuglas,naina