Saturday, May 9, 2009

சீமான் ஒரு ! அல்லது ?

சீமான் நீங்கள் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வைராக்கியத்தோடு உழைப்பவர். உங்கள் முயற்சியில் காங்கிரஸ் தோற்று போனாலும் அவர்கள் அ.தி.மு.க வெற்றி பெற்றால் அவர்கள் அ.தி.மு.க விடம் கூட்டணி வைக்க தயங்க மாட்டார்கள். அ.தி.மு.க விடம் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைப்போம் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் என்று நேற்று கூறி உள்ளார் .அப்போது தனி ஈழம் என்னவாகும் ?

நீங்கள் காந்தியை இதில் இழுத்து இருக்க வேண்டாம். அவர் நமது தேசத்தின் தந்தையாக மதிக்க படுகிறார் . முதலில் இலங்கையில் நடப்பது நம் நாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் தெரியாது . இங்கு எந்த செய்தியும் படத்தோடு வருவதில்லை அவர்கள் எத்தனை பேர் இலங்கையில் இறந்தார்கள் என்று சின்ன செய்தி வெளி வருகிறது . முதலில் இந்தியர் அனைவருக்கும் இந்தசெய்திகளை படத்தோடு காட்டுவோம் . அந்த தாக்கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும் . லண்டனில் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த இரு ஈழத் தமிழர்கள் போல நீங்கள் நம் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க
தயாரா ? சேர்ந்து இருக்க நங்கள் தயார் .

தனி ஈழம் அமைப்போம் என்று கூறிய அ.தி.மு.க ஏன் 2001-2006 ஆட்சியின் போது கூறவில்லை. 2005 லில் தான் ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார் அப்பொழுது தமிழகத்தை ஆண்டது அ.தி.மு.க மெஜாரிட்டி அரசு தானே ஏன் சொல்லவில்லை?அவர்களுக்கு நீங்கள் ஒட்டு வாங்கி தர முடிவு செய்து உள்ளிர்கள் . இப்பொழுது மக்களை சந்திக்க விமானத்தில் வந்தவர் ஏன் தமிழக மீனவர்கள் இறந்த பொழுது வரவில்லை அப்பொழுது விமானம் வேலை செய்யவில்லையா அல்லது கண்டுப்பிடிக்க படவில்லையா ? எனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வந்தேன் என்று கூறியவர் தீவிரவாதிகள் என்று கூறியது யாரை பார்த்து (விடுதலை புலிகளா ??). நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் .

நீங்கள் உங்கள் குரலை உயர்த்த சரியான இடம் நம் பாராளுமன்றம் தான் .ஒரு மேலவை எம்.பி யாக மாறுங்கள். உங்கள் பேச்சால் ஓட்டு வாங்க துடிக்கும் அ.தி.மு.க அல்லது பா.ம.க விடம் மேலவை எம்.பி யாக ஒரு இடம் கேளுங்கள் .அல்லது ஈழ பிரச்சனையை வைத்து ஒரு படத்தை எடுத்து இந்தியா முழுவதும் திரை இடுங்கள் . ஈரான் படத்தை புரிந்து கொள்ளும் இந்தியன் உங்கள் படத்தையும் புரிந்து கொள்வார்.

சேவின் உருவப்படம் பொறித்த அடைகளை அணியும் நீங்கள் எதாவது செய்தால் உங்கள் உருவப்படம் பொறித்த அடைகளை அணிய ஒரு கூட்டம் உருவாகும் . 2001-2006 ஆட்சியின் பொழுது நீங்கள் இது போல பேசி இருந்தால் நீங்கள் வைகோ போல தொடர்ந்து சிறையில் இருந்து இருப்பிர்கள்.
நீங்கள் இதுவரை எங்களுக்கு ஒரு ! . தொடர்ந்து காந்தி, கோட்சே என்று பேசி வந்தால் ? யாக மாறி விடுவிர்கள் .

8 comments:

லக்கிலுக் said...

நல்லப்பதிவு :-)

//காங்கிரஸ் தோற்று போனாலும் அவர்கள் அ.தி.மு.க வெற்றி பெற்றால் அவர்கள் அ.தி.மு.க விடம் கூட்டணி வைக்க தயங்க மாட்டார்கள். //

ஈழத்தாய் மயக்கத்தில் இருப்பவர்களிடம் எதைச் சொல்லியும் பிரயோசனமில்லை.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீர் தமிழுணர்வாளர்கள் எக்ஸ்போஸ் ஆகிவிடுவார்கள்.

இரும்புத்திரை said...

நன்றி லக்கிலுக்

கார்க்கிபவா said...

நச்..

வில்லங்கம் said...

paravaala Arvind..... good one........ I have never expected such nice things from U.... keep going man !!

Ramesh said...

//மும்பையில் ஒரு வடநாட்டு தே மகன் இந்த செய்தியை பார்த்து விட்டு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான்

நான் கேட்டேன் உன் வீட்டில் நுழைந்து உன் அம்மா தங்கை கையை பிடித்து ஒருவன் இழுத்தால் நீ புலியாக மாறுவாயா அல்லது பூனையாக மாறுவாயா

அவன் பதிலே சொல்லவில்லை

இந்த வதந்திகளை பரப்பும் எல்லோரும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்

மானமுள்ள தமிழர்கள் அந்த சமயத்தில் எப்படி மாறுவார்கள் எப்படி மாறினார்கள் என்று இந்த சரித்திரம் பேசும்

பிரபாகரனை காட்டி கொடுத்த மற்றும் தன் சொந்த தாயை கூட்டி கொடுத்த துரோகி கருணா இன்னும் சில நாட்களில் கொல்ல படுவான் (அவன் கூட்டு சேர்ந்த சிங்கள நாய்களால்)

ஒரு தீவில் பிரபாகரன் என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (சரத் பொன்சேகா மட்டும் மகிந்த ராஜபக்சே ) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபாகரன் வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபாகரன் சென்ற பிறகு

சரத் பொன்சேகா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லவே இல்லை

சரத் பொன்சேகா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லை நான் பயப்படவே இல்லை

சரத் பொன்சேகா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியும் நீங்க பயந்துட்டிங்க

மகிந்த ராஜபக்சே : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

சரத் பொன்சேகா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

மகிந்த ராஜபக்சே : பிரபாகரனை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

தமிழக மக்கள் : நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் பிரபாகரனை ஒன்றுமே செய்ய முடியாது

தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் //

Nice comment on another blog. Wanted to appreciate you on your blog. ;-) I am too ஒரு வடநாட்டு மகன்!

Unknown said...

ஏலும் எண்டால் இந்த கேள்விகளிற்க்கு விடை சொல்லுங்க பார்ப்பம்

http://siruvan2.blogspot.com/2009/05/blog-post_29.html

Anonymous said...

ippadiyum?

இரும்புத்திரை said...

thanks kaarki,jk,ramesh,siruvan,pukalini