Wednesday, May 6, 2009

தனி ஈழம் தொடர்பாக வைகோ,விஜயகாந்துடன் ஒரு சந்திப்பு

முதலில் வைகோ ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்

அரவிந்த் : என்ன பாஸ் ரொம்ப சோகமா இருக்கீங்க ?

வைகோ : தனி ஈழம் அமைக்க இலங்கை சென்று இடம் பார்க்க சொல்லி இருக்கிறார்.அம்மா நானும் தம்பி சம்பத்தும் ஒரு படையோடு போறோம்.

அரவிந்த் : போயிட்டு வர்றோம்ன்னு சொல்லுங்க

வைகோ : நான் வேற தேவை இல்லாம சரத் பொன்சேகாவை கலாய்த்து விட்டேன் .இனிமேல் எங்கே வர முடியும் . கலைஞர் எங்கள் கட்சியை தான் உடைத்தார்.அம்மாவோ எங்களை இல்லாமல் செய்து விடுவார் என நினைக்கிறேன்.

அரவிந்த் : சும்மாவே இரண்டு பெரும் வயலே வெடி வெடித்து வானவேடிக்கை காட்டுவிங்க.

ஆனால் உங்களுக்கு தனி ஈழம் கொண்டான் என்ற பட்டம் நிச்சயம் உண்டு . வெற்றி பெற வாழ்த்துக்கள் .

வைகோ : கிடைக்கலைனா ?

அரவிந்த் : வந்தா மலை போனா ம..

வைகோ : என்ன தம்பி அசிங்கமா பேசுற

அரவிந்த் : இல்ல பாஸ்ஸு ம.தி.மு.க கட்சின்னு சொல்ல வந்தேன்

வைகோ : உன்ன பத்தி எனக்கு தெரியாதா என்ன சரி மறுபடியும் கேட்கிறேன்
கிடைக்கலைனா ?

அரவிந்த் : அப்ப அடுத்த செட்டு ராமதாஸ், காடுவெட்டி குரு தலைமையில் வரும் .
வைகோ : அப்ப சரி.

அரவிந்த் : என்னா வில்லத்தனம் என்ன திரும்பவும் யோசனை ?

வைகோ : தாய் கழகத்தில் சேரலாம்ன்னு நினைக்கிறேன்

அரவிந்த் : தனியா போனா கலைஞர் உங்களை சேர்த்துப்பாரா ?

வைகோ : நீ முதல்ல வெளிய போ. பயபுள்ள ரொம்ப அழகா நோட்டம் விடுறான்.

******************************************************************************************************************************
விஜயகாந்த் வைகோ விஷயம் கேள்விப்பட்டு தனி விமானத்தில் இலங்கை செல்கிறார் செல்வதற்கு முன் சென்னையில் சிங்கள பத்திரிகையாளர்களுடன் ஒரு சந்திப்பு கூடவே மொழி பெயர்க்க அரவிந்த்

சிங்கள பத்திரிகையாளர்கள் முன்பு

விஜயகாந்த் : ஏய் நீங்க கடத்திகிட்டு வந்த எங்கள் மீனவர்களின் படகு மொத்தம் முப்பது அதுல பத்து நல்ல படகு மிச்சம் கொஞ்சம் உடைஞ்ச படகு
அரவிந்த் : கேப்டன் புள்ளி விவரத்தை நிறுத்துங்க அவங்க நீங்க ப்ளைன்ல சாப்பிட்ட போர கணக்குனு நினைகிறாங்க

சிங்கள பத்திரிகையாளர்கள் : ஏன் இவர் மட்டும் தனியா வர்றாரு ?

அரவிந்த் : அவர் தான் தமிழ்நாட்டின் கேப்டன்

சிங்கள பத்திரிகையாளர்கள் : ரஞ்சி டீம்லையா ?


விஜயகாந்த் : காஷ்மீர் - கன்னியாகுமரி வரைக்கும் நான்

அரவிந்த் : போதும் அவங்க தமிழ் படம் பார்த்தது இல்லையாம்

விஜயகாந்த் : சீக்கிரம் நான் சொன்னதை சிங்களத்தில் சொல்

அரவிந்த் : !@$^*)(*&^%#@~!@#$%^*()*&^%$!@$^*)(*&^%#@~!@#$%^*()*&^%$!@$^*)(*&^%#@~!@#$%^*()*&^%$

விஜயகாந்த் : என்ன சொன்ன ?

அரவிந்த் : தனி ஈழம் தர மறுத்தால் இலங்கை மீது போர் தொடுத்து ராஜபக்சேவையும்,பொன்சேகாவையும் கைது செய்து ஐ.நா வில் ஒப்பைடைப்போம் என்று சொன்னேன் .

விஜயகாந்த் : இத நான் சொல்வே இல்லையே

அரவிந்த் : இல்ல சொல்விங்கன்னு நினைச்சு நானே நங்கூரத்தை நல்லா நச்சினு போட்டுட்டேன்

விஜயகாந்த் : இப்ப தப்பிக்க எதாவது வழி சொல்

அரவிந்த் : இது எங்கள் ஆசான் பட விளம்பரம்ன்னு சொல்லுங்க

விஜயகாந்த் : ஆமா அந்த படத்தில் நாங்கள் இந்த பிரச்சனையை தொட்டு இருக்கிறோம்

அரவிந்த் : நீங்க அந்த படத்துல வங்கில வேலை செய்றிங்க அப்புறம் எப்படி ஈழ பிரச்சனை

விஜயகாந்த் : வங்கி பணத்தை எடுத்து தனி ஈழம் அமைக்கிறோம் டேய் கொஞ்ச நேரம் வாய மூடு

அரவிந்த் : அப்ப விக்ராந்த் ?

விஜயகாந்த் : அவன் தான்டா பணத்தை பட்டுவாடா பண்றான்
உனக்கு ஆனந்த விகடன் லூசுப்பையனே தேவைல்ல வா போவோம்
பயணம் ரத்து செய்யப்படுகிறது