Thursday, May 7, 2009

விராக்குளத்து கதைகள் - 1

(என் சொந்த ஊர் இது என்னுடைய தந்தை எனக்கு கூறிய கதை)
அவன் அந்த ஊரிலே பெரிய பொய்யன். பொய் சொல்வதில் அவன் அவனை அடித்து கொள்ள வேறு ஆளே கிடையாது. அவன் மகன் பொய்யே சொல்வதில்லை என்ற குறை அவனுக்கு உண்டு. (அப்பாவின் பழக்கங்கள் மகனும் மகனுக்கு மிகவும் பிடிக்கும் அல்லது பிடிக்கவே பிடிக்காது).
ஓருநாள் ஊரார் மத்தியில் ஏதோ பொய் சொல்ல பையனும் அங்கே வர ,பையனிடம் கேட்ட பொழுது அவன் உண்மையை சொல்லி விட்டான். ஊரே கை கொட்டி சிரித்து விட அந்த கோபத்தில் ஊருக்கு வெளியே உள்ள கிணத்தில் மகனை தள்ளி விட்டு வந்து விட்டான். அது ஒரு பாழும் கிணறு ஏற வழியே கிடையாது .
வீட்டுக்கு வந்து பார்த்தால் மகன் உள்ளே சொட்ட சொட்ட நனைந்து வாசலில் இருக்கிறான். எப்படி வந்தே என்று கேட்கிறான் மகனிடம்
அப்பா நீங்க போன பிறகு ஒருத்தன் வந்து ஒண்ணுக்கு போனான் . அதை பிடித்து மேலேறி வந்து விட்டேன் .
நீதி 1 : சில இரகசியங்களை உங்கள் வாரிசுகளிடன் மட்டும் சொல்லுங்கள் .உங்கள் குழந்தைகளின் ஆதர்ச நாயகன் நீங்கள் தான்.நல்ல பழக்கங்களைக் கற்று கொடுங்கள் . உங்கள் ஆசையை திணிக்காதிர்கள்மிக மோசமாக கெட்டு போவார்கள்
குழந்தைகளின் உலகத்தை அருகில் இருந்து பாருங்கள் பேசுங்கள் பேச விட்டு நிறைய கேளுங்கள் .
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் , அவர்களின் மனச்சிதைவுகளையும் நாம் பேசினாலே தடுக்க முடியும்.
குழந்தைகளிடம் பேச நேரம் இல்லாதவர்கள் இங்கு செல்லவும்
இடம் : கிழக்குப் பதிப்பகம் மொட்டைமாடி,எல்டாம்ஸ் ரோடு,சென்னை.
நாள் : 10/மே/2009.
நேரம் : மாலை 4:30 - 7.00.
இங்கு சென்று அவசியத்தை தெரிந்து கொள்ளவும்
பின் குறிப்பு :
என் பதிவில் நிறைய எழுத்து பிழைகள் உள்ளது .அதற்கு காரணம் நான் பதிவிடும் கணினியில் யூனிகோட் பிரச்சனை உள்ளது என்னால் பதிவிடும் பொழுது கவனிக்க முடியவில்லை .ஹிட்லருக்கு பயந்து டைரி எழுதும் நாஜிக்கள் போல என் நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது .இங்கே யாருக்கும் தமிழர்களை கண்டால் பிடிக்காது என்னை பற்றி சொல்லவே வேண்டாம் என்னை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் என் பக்கம் இருக்கும் பிழைகளை திருத்தி கொள்ள சில காலம் பிடிக்கும்