Tuesday, May 5, 2009

வடகம்,கூழ்வத்தல்

அவியல் , குவியல் , மற்றும் காக்டையில் வரிசையில் ஒரு சிறு முயற்சி .
இந்த பதிவை எழுதும் பொழுது நான் படித்த சினிமா செய்தி ஞாபகம் வந்தது.
இயக்குனர் ஸெல்வன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், மாக்கான். முட்டாள் முரடனுக்கு ஊர் பக்கம் சொல்லும் செல்லப் பெயர் மாக்கான். படத்தின் சப் டைட்டிலில் ஷாருக்கான், சல்மான்கா‌ன், அமீர்கான் வ‌ரிசையில் மாக்கான் என்று போடுகிறார்கள்.

அப்ப இந்த பதிவில்

ஷாருக்கான் - வால் பையன் ( காரணம் எனக்கு கூட பின்னுட்டம் இட்டு தொடர்ந்து எழுத சொல்கிறார் )

சல்மான்கா‌ன் - வேற யார் நம்ம கார்கி தான் ( நான் என் கருத்தை சொன்னால் பின்னுட்டம் இட்டு இதற்கு தானே அலைந்தாய் என்று என் மூஞ்சை உடைக்கிறார். நான் பின்னுட்டம் தேடி அலைபவன் இல்லை )

அமீர்கான் - சத்தியமா பரிசல் தான் ( அவியல் மற்றும் காக்டையில் மாற்றி விட்டு படித்தவரை பார்த்து தொப்பி தொப்பி என்று வித்தியாசம் காட்டினார்)

அப்ப மாக்கான் - இன்னும் புரிஞ்சிகலையா ஐயோ ஐயோ பாவம் இன்னும் பச்ச பிள்ளை மாதிரி பாக்காதிங்க அது அரவிந்த்(சாட்சாத் நான் தான்)
மேலே கூறிய ஷாருக்கான், சல்மான்கா‌ன், அமீர்கான்களை நான் தினமும் படித்து வருகிறேன்.

******************************************************************************************
ஏப்ரல் மாதத்தில் பதிவு எழுத துவங்கினால் அரசியல் பத்தி எழுத கூடாதா
// ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு கமெண்ட் கூட தாண்டலை. ஏப்ரல்ல எழுதின பதிவுக்கு மே மாசம் கமெண்ட் வாங்கிட்டு எதுக்கு இந்த அதிக பிரசங்கித் தனம்?. //
ஏப்ரல் மாதத்தில் எழுதிய பதிவிற்கு மே மாதத்தில் கமெண்ட் போட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் .அது கூட ஒரு திறமை தான் .
இதுவே தவறு ஒரு பதிவில் இரண்டு கமெண்ட் (உங்கள் கமெண்ட் உட்பட அப்போ நான் இப்ப சொம்பத் தூக்கிட்டு வரலாமா அரசியல் பத்தி எழுதலாமா ?)
இது கூட ஒரு அரசியல் பாணியில் உள்ள ஒரு தாக்குதல் தான் திரு சஞ்சய் என்ற பொடியன் அண்ணனே .
அப்ப உங்கள் கருத்துப்படி பார்த்தால் லக்கிலுக்கும் , செல்வேந்திரன் மற்றும் தான் அரசியல் பத்தி எழுத வேண்டும் .( மூன்று பதிவிற்கு மேல் மட்டும் நிறைய கமெண்ட் வாங்குறாங்க )
புதிதாக எழுத வருபர்களை "இப்போவே எல்லாரும் உங்களை ஓரம்கட்ற மாதிரி நடக்காதிங்க." இப்படி எல்லாம் பூச்சு காட்டதிங்க பொடியன் அண்ணனே .
//தனி மனித தாக்குதல் பத்தி பேசற மூஞ்சியப் பாரு. // என்னோட மூஞ்சியப் எப்போ அண்ணா உங்க கிட்ட காட்டினேன்
//கருணாநிதி அரசியல் ஆலோசனை சொல்ல ஆள் தேடறாராம். லக்கி கிட்ட சொன்னா சேர்த்துவிடுவார். முயற்சி பண்ணுங்க தம்பி.//
கண்டிப்பா அவர்கிட்ட சேர்த்து கொள்வேன் நீங்கள் சிபாரிசு பண்ண வேண்டாம்
உங்கள் அறியுரைக்கு நன்றி இனிமேல் நான் அரசியல் பற்றி எழுத போவதில்லை இப்போ நீங்கள் என்னை சேர்த்து குவிங்களா ??
அடுத்த பதிவில் நான் ஈழ தமிழர்களைப் பற்றி எழுதினால் திரு பொடியன் அண்ணன் அவர்கள் என் சட்டையை பிடித்து இதெல்லாம் மூத்த பதிவர்களின் வேலை இதை எழுத எனக்கு தகுதி இல்லை என்று அடித்து விடுவார்.
அரசியல் பற்றி என்ன தகுதி இருக்கிறதோ அதே தகுதி ஈழ தமிழர்களைப் பற்றி எழுதவும் இருக்கிறது காரணம் மடிப்பாக்கத்தில் நான் அவர்களுடன் வாழ்ந்து உணவு அருந்தி அவர்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளை போல உறவாடி இருக்கிறேன் .
அதே தகுதி உடன் தான் செல்வேந்திரன் வலைப்பூவை முழுதாக படித்து விட்டு எழுதி இருக்கிறேன் ஒரு தி.மு.க கட்சியை ஆதரிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறேன் கலைஞரை பற்றி எழுதினேன் எழுதுவேன் .
******************************************************************************************
தினமும் படிக்கும் மற்ற பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்
சாரு,லக்கி லுக், அதிஷா , நரசிம், தாமிரா , குசும்பன் , உண்மை தமிழன், வெட்டிபயல் ,மாதவராஜ், ராமகிருஷ்ணன், வடகரை வேலன் ,வித்யா, செல்வேந்திரன்,CableSankar ,ச்சின்னப் பையன் , முரளி கண்ணன் ,அபி அப்பா , அனுஜன்யா ,ஜ்யோவ்ராம்சுந்தர் ,bleaching powder, ponniyin selvan -mkp ,pihai pathiram,dr.bruno இன்னும் பலர் . விடுபட்டு இருந்தால் என்னை மன்னித்து கொள்ளவும் .
லக்கி லுக் - இவரை பார்த்தே நான் எழுத நினைத்தேன் .(என் குரு)
அதிஷா , நரசிம் - எழுதி இவர்களிடம் அசிங்க பட்டு விடுவேனோ என்று பயந்தேன் .
கார்கி,வித்யா - படித்து விட்டு எழுத தொடக்கி விட்டேன் எளிமையான எழுத்து.
முதல் பின்னுட்டம் இட்டு நான் காயப்படுத்தியது - கார்கி
முதல் பின்னுட்டம் இட்டு என்னை காயப்படுத்தியது - கார்கி
முதல் பின்னுட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தியது - தீப்பெட்டி .
முதல் பின்னுட்டம் இட்டு என்னை உஷார்படுத்தியது - வால் பையன்
***********************************************************************************************************************
இன்னைக்கு ஒரு சாம்பிள் பலான ஜோக்
இரண்டாவது படிக்கும் படிக்கும் ஒரு பையன் அறிவியல் ஆசிரியை அருகில் அழைத்து "டீச்சர் ஒரு ஏழு வயது பையனும் ஒரு ஏழு வயது பெண்ணும் செக்ஸ் வைத்து கொண்டால் குழந்தை பிறக்குமா" என்று கேட்டான்.
ஆசிரியை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்
உடனே பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் திரும்பி அதான் ஒன்றும் ஆகாது என்று சொன்நேனே வருத்தபடாதே என்றான் .
இப்ப சொல்லுங்க பாலியல் கல்வி தேவையா என்று
முதல்ல உங்க வீட்டில் இருக்கும் தொல்லைகாட்சியை அணைத்து தினம் உங்கள் குழந்தையோடு பேசுங்கள் .

2 comments:

லக்கிலுக் said...

அரவிந்த்! மடிப்பாக்கமா? வாங்க.. வாங்க..

இரும்புத்திரை said...

thanks luckylook