Wednesday, August 19, 2009

ஆதி,நையாண்டி நைனா,டக்ளஸ் எங்கிருந்தாலும் உடனே வரவும்

இரவைத் தேடும் என் சரக்கு

ஒரு புஸ்வானம் போல
நான் சரக்கு அடிக்கும் போதெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
மிக்சர்.

சரக்கின் அழகு அந்த மூடியென்றால்
கிக்கின் அழகு அந்த கடைசி சொட்டு
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
பாட்டிலை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறேன்

என் சரக்கு
ஒரு இரவைப் போல
குறைந்து கொண்டேயிருக்கிறது
நீ
ஒரு காக்காவைப் போல
கல்லைப் போட்டு குடித்துகொண்டுயிருகிறாய்

சரக்கிற்கும்
அந்த ஊறுகாய்க்கும்
தேவையான சில்லறையை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறேன்

ஒரிஜினல் சரக்கு

இந்த கவிதைகள் நையாண்டி நைனா மற்றும் டக்ளஸிற்கு சமர்ப்பணம்.

டிஸ்கி : ஆதி அண்ணன் என்னை மன்னிச்சுருங்க.

22 comments:

Raju said...

\\ஒரு காக்காவைப் போல
கல்லைப் போட்டு குடித்துகொண்டுயிருகிறாய்\\

இதுதான் டாப்பு.

\\இந்த கவிதைகள் நையாண்டி நைனா மற்றும் டக்ளஸிற்கு சமர்ப்பணம். \\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

நையாண்டி நைனா said...

\\இந்த கவிதைகள் நையாண்டி நைனா மற்றும் டக்ளஸிற்கு சமர்ப்பணம். \\

சமர்ப்பணம் யாருக்குயா வேணும்....
மொய்ப்பணம் 1000001/- ஐ அனுப்பவும்...

இரும்புத்திரை said...

thanks duglas,nainaa (panam dd eduththachu)

சென்ஷி said...

என்னப்பா இது. ஆளாளுக்கு இப்படி துவைச்சு தொங்கப்போட்டுருக்கீங்க...

செம்ம கலக்கல் :)

குசும்பன் said...

நைனா உங்களோட எதிர்கவுஜ தான் டாப்பு!

//நீ
ஒரு காக்காவைப் போல
கல்லைப் போட்டு //

செம கலக்கல், காக்காவா ஆதிய நினைச்சு பார்த்தேன் சிப்பு சிப்பா வருது:))

இருந்தாலும் என்னை எதிரிங்க கூடாரத்துக்கு தனியா அனுப்பும் நீங்க எதிரியா நண்பனா:))

நாடோடி இலக்கியன் said...

//என் சரக்கு
ஒரு இரவைப் போல
குறைந்து கொண்டேயிருக்கிறது
நீ
ஒரு காக்காவைப் போல
கல்லைப் போட்டு குடித்துகொண்டுயிருகிறாய்//

நக்கல் கவிதையென்றாலும் இரவு உவமை அருமைய்யா.

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..

ஆதி இப்படி சொல்லித்தான் எஸ் ஆவார்ய் பாருங்க

குசும்பன் said...

//டிஸ்கி : ஆதி அண்ணன் என்னை மன்னிச்சுருங்க//

இது அதை விட டாப்பு நெக்கலுடா சாமி!

நையாண்டி நைனா said...

/*குசும்பன் said...
நைனா உங்களோட எதிர்கவுஜ தான் டாப்பு!*/

அண்ணே.. இதெல்லாம் நம்ம சங்கத்தோட இன்னொரு சிங்கம் அரவிந்த் அவர்களோட படைப்பு...

நையாண்டி நைனா said...

/*இருந்தாலும் என்னை எதிரிங்க கூடாரத்துக்கு தனியா அனுப்பும் நீங்க எதிரியா நண்பனா:))*/

நாங்க நண்பர்களே...
பயப்பாடாதீங்க தல.... நாங்க பின்புலத்திலே நிற்போம்... எதிரிகளின் கவிக்கோட்டைய அனுஜகுண்டு போட்டு அழிப்போம்

வால்பையன் said...

ஆஹா கலக்கலா வந்துருக்கு!
தொடர்ந்து கவுஜுங்க!

துபாய் ராஜா said...

//ஒரு புஸ்வானம் போல
நான் சரக்கு அடிக்கும் போதெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது மிக்சர்.//

ஆரம்பமே அட்டகாசம். அம்புட்டும் அம்புட்டு ருசி.

அரவிந்த்,சரக்குக் கவிதைகள் நல்ல போதை.இந்த மாதிரி எதிர்கவிதைகள் மட்டுமில்லாமல் அவ்வப்போது சொந்த சரக்கையும் எங்களுக்கு கொடுங்கள்.

//சரக்கிற்கும்
அந்த ஊறுகாய்க்கும்
தேவையான சில்லறையை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறேன்//

எனது வரிகள்,

காலையிலும்
மாலையிலும்
மற்றும்
மதியத்திலும்
இரவு
அடிக்க வேண்டிய
சரக்கிற்கான
சில்லறையை
சேகரித்து
கொண்டேயிருக்கிறேன்.

எப்பூபூடி,நாங்களும் ரவுடிதான்டி.....
:))

Thamira said...

என் பதிவுக்கு வந்து ஓட்டு போட்டிருக்கிறாயா? ஹிட்ஸ் ஏத்தியிருக்கிறாயா? குறைந்தபட்சம் நாலு பின்னூட்டம்தான் போட்டிருக்கிறாயா? அல்லது நீ மாமனா மச்சானா?

யார் கவுஜயை செய்கிறாய் நக்கல்..?

உஸ்ஸ்ஸப்பா.. இதுக்கு மேல உதார் வுடமுடியல.. யாராவது எனக்காக கூவுங்களேன்.

(அப்புறம் ரசித்தேன் அனைத்தையும். என்ன, சரக்கோடு லிங்க் செய்வதென்றால் எந்தக் கவிதையையும் கலக்கிவிடலாம். லட்டு மாதிரி செய்திருக்கிறீர்கள். லிங்குக்கு நன்றி.!)

இரும்புத்திரை said...

nandri senshi

nandri kusumban

nandri நாடோடி இலக்கியன்

nandri karki

nandri naina

nandri valpaiyan

nandri dubairaja kavithai romba nalla irukku

Thamira said...

முதலாவதையும், மூன்றாவதையும் இன்னும் ரசித்தேன்..

இரும்புத்திரை said...

nandi aathi unga blogla pathil pottu irukken

SK said...

ரைட்டு :-)

இரும்புத்திரை said...

நன்றி sk

Nathanjagk said...

இட்ஸ் ஓகே! இருந்தாலும் இன்னும் உங்ககிட்டு இருந்து எதிர்பார்க்கிறேன்! எதிர்கவிதை புயல் வால்பையன் கிட்ட கேட்டுப் பாருங்க! வேணா இதே கவிதைக்கு நான் ஒரு 'டெமோ' காட்டடுமா? ​

இரும்புத்திரை said...

தல இதெல்லாம் என்கிட்டே கேட்கனுமா எதிர்கவிதைய எடுத்து விடுங்க

வால்பையன் said...

//எதிர்கவிதை புயல் வால்பையன்//

முதல்ல ஒரு மூணு பேர் தாம்மா அடிச்சாய்ங்க!
அப்புறம் ஒருத்தே..ன் போன போட்டு மச்சி ஃப்ரியா இருந்தா வாடா ஒரு அடிம சிக்கிருக்குன்னு சொன்னா..ன்
ஒரு பத்து பேர்மா சும்மா அடி அடின்னு அடிச்சாய்ங்க

நானும் அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இரும்புத்திரை said...

பாஸ் நீங்க ரொம்ப நல்லவர்

அவ்வ்வ்வ்வ்வ்