Monday, August 10, 2009

உரையாடல் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அடுத்தப் போட்டியைப் பற்றிய அறிவிப்பு - 1

உரையாடல் போட்டிக்குப் பிறகு என்ன போட்டியை நடத்தலாம் என்று பைத்தியக்காரனும்,குருஜியும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பதிவர்கள் வெளி நாடுகளிலும்,வெளி மாநிலத்திலும் இருந்து கொண்டு விமர்சனக் கட்டுரை எழுதுவதால் "அவர்கள் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்" என்று பதிவர்களின் வீரத்தைப் பற்றிச் சிலர் சந்தேக விதைகளை விதைக்கிறார்கள். அதனால் பதிவர்களின் வீரத்தை நிருபிக்க ஒரு போட்டியை நடத்த முடிவு செய்கிறார்கள் இருவரும். பரிசு 10 லட்சம் (யார் வீட்டு பணமோ). போட்டியின் விதிகளைப் போட்டி நடக்கும் அன்று தான் தெரியும் என்ற அறிவிப்பு வருகிறது. அதை தொடர்ந்து பதிவர்கள் அனைவரும் சென்னையில் கூடுகிறார்கள்.


போட்டிக்கு ப்ளீச்சிங்க் பவுடர் வந்து இருக்கிறாரா என்று அனைவரும் தேடுகிறார்கள். கண்டுப் பிடிக்க முடியவில்லை.


அரவிந்த் : தோழர் அதிஷா


அதிஷா : நீ எனக்கு தோழர் இல்ல பாலர்.


அரவிந்த் : அப்ப மாமா அதிஷா இது ஒ.கே வா


அதிஷா : பேர் சொல்லியேக் கூப்பிடு. (மனதுக்குள்) இவனுக்கு ஒரு சின்ன சைஸ் ஆப்பு வாங்கி அடிச்சா தான் அடங்குவான் போல இருக்கு.


போட்டியின் விதிகளை இருவரும் (பைத்தியக்காரன்,குருஜி)
அறிவிக்கிறார்கள்.


1.சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் இந்த வழியாக போய் வேறு வழியாக வர வேண்டும்.


2.அகரவரிசையில் பதிவர்கள் கூண்டுக்குள் போக வேண்டும்.


இதை கேட்டவுடன் அரவிந்த் பிதாமகன் லைலா மாதிரி மண்ணில் விழுந்து அழுகிறார். அதிஷாவுக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு.காரணம் அரவிந்த் பெயர் முதலில் இருக்கிறது.


அரவிந்த் : என்ன சிரிப்பு சின்னப்புள்ள தனமா?


அதிஷா : உன்ன பார்த்தா எனக்கு சிரிப்புப் பதிவர் மாதிரி இருக்கு. (மீண்டும் சிரிக்கிறார்).உனக்கு நான் ஆப்பு அடிக்க வேண்டாம்.நீயே ஆப்புல போய் உக்காருவ.


அரவிந்த் : (அழுவதை நிறுத்தி விட்டு) ரொம்ப சிரிக்காதீங்க. (சிரிக்கிறார்)


அதிஷா : இந்த துன்பத்திலும் எப்படி சிரிக்கிற ?


அரவிந்த் : எனக்கு அடுத்து நீங்க தான். அத நினைச்சேன்,சிரித்தேன்.


அதிஷா : ஆதி இருக்காக.


அரவிந்த் : அவர் தாமிரானு போட்டியிலே பேர் கொடுத்து இருக்கார்.


அதிஷா : யார கேட்டு மாத்தினாரு. இரு போய் அவரு இடுப்புல குத்திட்டு வரேன்.அனுஜன்யா இருக்காக.


அரவிந்த் : அவர் யூத்தாம். அதனால வொய் வரிசையிலே வருவாராம்.


அதிஷா : இது முன்னாடியே தோழருக்குத் தெரியும் போல.அதான் உஷாரா லக்கிய யுவகிருஷ்னா என்று மாத்திக்கிட்டார்.


அரவிந்த் : எங்க அம்மா கூட சொன்னாங்க. புனைப்பெயர்ல எழுது சொன்னாங்க.நான் கேட்காம மாட்டிகிட்டேன்.


அதிஷா : ஆமா புனைப்பெயர்ல எழுதிடாலும். சரி தப்பிக்க ஏதாவது வழி சொல்லு.


அரவிந்த் : குருஜியோட ஒரண்டை இழுப்போம்.நீங்க தொடங்கி வைங்க


அதிஷா : நீயே இழு.


அரவிந்த் : முடியாது.நான் உள்ளே போக பயம் கிடையாது. நீங்க தான் தொடங்கனும்.


அதிஷா : (குருஜியை பார்த்து) போங்கையா நீங்களும் உங்க போட்டியும். எம் பேரு வினோத்.நான் அந்த பேர்ல தான் போட்டிப் போடுவேன்.


அரவிந்த் : அதானே எனக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கு நான் அதுல தான் போட்டிப் போடுவேன்.


குருஜி : சரி ஒரு தடவை தான் பேர் மாத்தலாம். (அரவிந்தை முறைத்துப் பார்த்துக் கொண்டே செல்கிறார்)


அரவிந்த் : அப்பாடா தப்பிச்சோம்.


நர்சிம் : நாடோடி, நல்ல வேளை நாம நடுவில வர்றோம்.


பரிசல் : கார்க்கி,எனக்கு முன்னாடி நீதான் போகனும். அதுக்குள்ள நான் எப்படியும் மூனு பதிவு போட்டு விடுவேன்.


வால்பையன் : குசும்பன் எங்கே, சரக்கு அங்கே.


கொஞ்ச நேரம் கழித்து


அரவிந்த் : அய்யா சிங்கம் களம் இறங்கிருச்சி.


சிங்கம் வந்து விட்டது என்று எல்லா பதிவர்களும் ஓடி மறைகிறார்கள்.


எட்டி பார்த்தால் முரளிக்கண்ணன் வருகிறார்.


தண்டோரா :

இத்தனை நாளாக எங்கு தான் போனாயோ.
நாட்களும் வீணானதே.

நையாண்டி நைனா : இதுக்கு ஒரு எதிர் கவுஜ இருக்கு சொல்லட்டுமா?


நர்சிம் : (மனதுக்குள்) இல்லனா என்ன விடவா போறீங்க.


தண்டோரா : எல்லாம் இந்த வால்பையன் தொடங்கியது. சொல்லுங்க சொல்லுங்க


நையாண்டி நைனா :

இத்தனை நாளாக எங்கு தான் ஒளிந்து கிடந்தாயோ.
ஊறுகாயும் வீணானதே.

டக்லஸ் : ம் ம்


முரளி : (கோபமாக) என்ன மனசுல உங்க இரண்டு பேருக்கும் பக்கடா,குட்டிமணி என்ற நினைப்பா?


தண்டோரா : இதுக்கும் ஒரு எதிர்கவிதை இருக்கு.


நையாண்டி நைனா :

வயிற்றில் உருளும்
சரக்கும், சிக்கனும் என்ற மிதப்பா ?


முரளி : நைனா.ரொம்ப வேண்டாம்.


நையாண்டி நைனா :

சரக்கு
எனக்கு கொஞ்சம் வேணும்.

முரளி வேறுப் பக்கம் திரும்பி கொள்கிறார்.


குருஜி : நையாண்டி நைனா இப்படியே போச்சு முதல நீங்க தான்.


நையாண்டி நைனா இதற்கு எதிர் கவுஜ சொல்லமல் அமைதியாக இருக்கிறார்.


வால்பையன் : என்ன அரவிந்த் உங்க புதுப் பெயர் என்ன ?


(தொடரும்...)


டிஸ்கி : ஒரு விளம்பரம்


அது என்ன பெயர். அதனால் குருஜி அரவிந்தை எப்படி மடக்குகிறார்,அதில் தப்பித்து இன்னொரு சிக்கலில் மாட்டும் அரவிந்த்,
குருஜியைத் தேடி வரும் ஒரு பூகம்பம் எல்லாம் நாளைய பதிவில்

9 comments:

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு அரவிந்த்.
அது எப்படி அதிஷாவிற்கு முன்னாடி நீங்க வருவீங்க,அகர வரிசையில் அதிஷா தான் முதலில் போகனும்.

:)

Athisha said...

நாடோடி இ.ன்

ஏன் இந்த கொலை வெறி எனக்கு ஆப்படிக்க இவ்ளோ ஆர்வமா!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:) :) :)

கலக்கல்!

மணிஜி said...

புத்தூர் கட்டுக்கு காசு அனுப்புங்கய்யா

நையாண்டி நைனா said...

ஆகா...
ஒரு முடிவாத்தான் இருக்காப்லே...
நடத்துங்க, நடத்துங்க...

Raju said...

பக்கடா. குட்டிமணியா..?
விதி வலியது.
பாருங்க..இங்க கூட இந்தாளு எனக்கு முன்னாடி கமென்ட் போட்டுட்டு போயிருக்காப்ல.
:)

நாஞ்சில் நாதம் said...

:))

வால்பையன் said...

சரியான சஸ்பென்ஸ்ல முடிஞ்சிருக்கே!

இரும்புத்திரை said...

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி அதிஷா

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி தண்டோரா இனி... மணிஜி

நன்றி நையாண்டி நைனா

நன்றி டக்ளஸ்

நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி வால்பையன்