Thursday, January 20, 2011

இஃப் எல்ஸ் காதல் கல்யாணம்

பத்தாவது பொதுத் தேர்வின் போது ஏதோ ஒரு பரிட்சையை முடித்து விட்டு தேறுமா தேறாதா என்று எல்லோருமே பார்த்துக் கொண்டிருந்தோம்.நண்பன் ஒருவன் மட்டும் சோகமாக இருந்தான்."என்னடா சிவகுமார் பேப்பர் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டானா..அவனுக்கும் எனக்கும் ஒரு கணக்கு இருக்கு..இதையே காரணமா வைச்சு அடிச்சிரலாம்..பாஸ் மார்க் வந்துரும் தானே.." என்று ஆறுதல் படுத்தினேன்."அது இல்லடா..இது வேற.." இன்னும் சோகமாக சொன்னான்.

"என்ன அக்கா அடிச்சிட்டாளா..அவள எல்லாம் நீ தாண்டா சமாளிக்கணும்..அவள் அடிக்க எல்லாம் ஆள் செட் பண்ண முடியாது.." நிலைமையை மாற்ற அவனை கடித்து கொண்டிருந்தேன்.

"அதுவும் இல்ல..இது வேற.."

"_____ சொல்லித் தொலடா _____..நானும் பாக்குறேன்..அது இல்ல..இது இல்லன்னு உயிர வாங்காத.."

கெட்ட வார்த்தை வேலை செய்தது."சொன்னா அடிக்க கூடாது.." சொல்லும் போதே சட்டையை மடித்து விட்டு கொண்டேன்."எங்க வீட்டுக்கு ஒரு ஜோசியக்காரன் வருவான்..அவன் சொன்னான்.."

"என்னடா சொன்னான்..உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆயிரும்னு சொன்னானா..நல்ல விஷயம் தானே..நீயும் உன் பையனும் இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சி ஒண்ணா பிட்டடிச்சி டென்த் பாஸ் பண்ணலாம்.."

"இல்லடா டெண்டுல்கர் செத்துப் போயிருவான்னு சொன்னான்டா.."

"இந்த வருஷம் இங்கிலாந்துல வேர்ல்ட் கப் இருக்கு..அதெல்லாம் எப்படிடா நடக்கும்..அவன் சொன்னான்னு நீயும் ஏண்டா.." எனக்கு பரிட்சை பயம் போய் இந்த விஷயம் என்னை ஆக்ரமித்திருந்தது.

"நீ நம்பலையா..அவன் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு.."

"என்ன அவன் சொல்லி தான் ஆடு மாடு எல்லாம் நடக்குதா..ஒன்பதாம் தேதி படையப்பா ரீலிஸ்..பதிமூணு சோசியல்..இரண்டரை மணி ஷோ ஒகேவா.." பேச்சு படையப்பாவிற்கு மாறியிருந்தது.நானும் டெண்டுல்கர் விஷயத்தையும் மறந்து விட்டேன்.

முதல் போட்டி சவுத் ஆப்ரிக்காவிடம் மவுத் ஆகி விட்டோம்.காலையில் தூங்கி கொண்டிருக்கும் போதே போன்."அவன் சொன்ன மாதிரியே நடந்திரிச்சி..டெண்டுல்கர் இறந்துட்டானாம்..வயசுல மட்டும் தான் இடிக்குது.."

விசாரித்த போது தான் தெரிந்தது.அது ரமேஷ் டெண்டுல்கர் என்று.சச்சின் இந்தியா வந்து விட்டார்.ஜிம்பாபேயுடனான மேட்ச்சில் சச்சின் இல்லாத காரணத்தால் மூன்று ரன்னில் காலி.இப்படியே போனால் அடுத்த போட்டியிலும் கென்யாவுடன் தோற்று விடுவோம் என்ற நிலைமை.சச்சின் வந்து அடித்தவுடன் தான் வெற்றி.ஜிம்பாபேவுடன் தோற்றதால் சூப்பர் சிக்ஸில் எல்லா போட்டியையும் ஜெயிக்க வேண்டிய நிலைமை.அதோடு வெளியே வந்து விட்டோம்.

அதிலிருந்து ஜோசியம் பார்ப்பதென்றால் ஒரு அலாதி பிரியம் தான்.என்னைக்கு என் வேலை விஷயத்தில் குறி சொன்னார்களோ அதில் இருந்து ஒரு பயம் கலந்த வெறுப்பு.நல்லதாக சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனதிற்கு கெட்டதாக சொன்னால் ஏற்க கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது.பல வருடங்கள்,பல நாட்கள் ஆன நிலையில் என் கையை பார்ப்பேன் என்று அடம் பிடித்து சொன்னவை இங்கே.போல்ட் பாண்டில் அவர் சொன்னது.

"நீ ஒரு புத்திசாலி..ஆனால் அதை வெளியே சொன்னால் அது மற்றவர்களுக்கு தெரியும்.. ஏன் வெளியே சொல்வதேயில்லை.."

"நான் ஒரு புத்திசாலின்னு நானே சொன்னா மட்டும் தான் உண்டு.என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே.." - வெளியே சொல்லவில்லை.

"நீ இன்னும் ஐம்பது வருஷம் உயிரோடு இருப்ப.."

"இன்னும் அத்தனை நாள் பதிவு படிக்கிறவன் நிலைமை தான் மோசம் இல்ல மோஷன்.."

"உன் கையில பணம் தங்காது.."

"தங்கிட்டாலும்..சின்ன வயசிலேயே தெரியும் என் கை ஓட்டக்கை என்று.கையை குமித்து தண்ணீரை அள்ள சொல்வார்கள்.தண்ணீர் உள்ளங்கையில் தேங்கி நின்றால் பணம் நிற்கும் என்றும் இல்லை என்றால் நிற்காது என்றும் சொல்வார்கள்.."

"உன் இதயத்தை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ.."

"உண்மை தான்..அடிக்கடி துடிக்குது.." என் எண்ணம் அவருக்கு தெரிந்து விட்டது என்று நினைக்கிறேன்.உடனே

"உனக்கு இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் ஆயிரும்.."

"விளங்கும்..குழந்தை திருமணம் தப்பில்ல.." என்று நினைத்து கொண்டேன்.

"உனக்கு ஒரு காதல் இருந்தது.அதுவும் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுகளில்..சற்றே யோசித்து விட்டு தீவிரமான காதல் நீயில்லாமல் நானில்லை என்று உருகி இருப்பீர்களே.."

சொல்லும் போது நான் இடைமறித்தேன்."அதி தீவிரமான காதல்.." என்று சொல்லி விட்டு நினைத்து கொண்டேன்."நான் அந்த சமயத்தில் மூன்று பெயரை காதலித்தேன்.ஜோசியத்துல எந்த பொண்ணு என்று சொல்ல முடிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மூணு பேர்ல ஒருத்திக்கு கல்யாணம் ஆகவில்லை.என்னை விட அதிக சம்பளம் வேற வாங்குறாளாம்.மனதிற்குள் இஃப் எல்ஸ் ஓடிக்கொண்டிருந்தது."

இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தால்) தென்

இஃப் (அவள் கணவனிடம் கேட்டுப் பாக்கலாம்) தென்

இஃப் (அவள் தொல்லை பொறுக்காமல் சரி என்றால்) தென்

சும்மா சொன்னேன் என்று சமாளிக்கலாம்

எல்ஸ் இஃப் (என்ன கொழுப்பா என்றால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எண்ட் இஃப்

எல்ஸ் இப் (அவளிடமே கேட்டுப் பாக்கலாம்) தென்

இஃப் (என் புருஷன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொன்னால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எல்ஸ் இஃப் (சரி என்று சொன்னால்) தென்

சும்மா சொன்னேன் என்று சிரிக்கலாம்.இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையா என்று கேட்கலாம்

எண்ட் இஃப்

எண்ட் இஃப்

எல்ஸ் இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகாமலிருந்தால்) தென்

இஃப் (அவளுக்கும் விருப்பமிருந்தால்) தென்

கிவ் மீ எ சான்ஸ் என்று சொல்லாம்.

எல்ஸ் இஃப் (திரும்பவும் நீயா என்று சொன்னால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எண்ட் இஃப்

எண்ட் இஃப்

இதை அம்மாவிடம் சொன்னால் திட்டு விழும்."ஆமா எந்த வேலையை தான் ஒழுங்கா செஞ்சிருக்க..சாப்பிடும் போது படிச்சுக்கிட்டே டிவி பாக்குறது.எதுலையும் உருப்படி இல்ல.." அதே பதினெட்டு வயதில் அம்மா கத்தியது ஏனோ நினைவுக்கு வந்தது.

திரும்பவும் சோசியம் மீது லேசாக நம்பிக்கை வந்தது.

6 comments:

அகல்விளக்கு said...

ஹிஹிஹி...

இஃப் எல்ஸ் என்ட் இஃப் சூப்பரு தல....

Suresh Kumar M said...

இது புதுசா? இல்ல பழைய பத்தியா?... ஏற்கனவே படித்த பத்தி போல் உள்ளதே!...

Suresh Kumar M said...

இது புதுசா? இல்ல பழைய பத்தியா?... ஏற்கனவே படித்த பத்தி போல் உள்ளதே!...

KANA VARO said...

வித்தியாசமா இருக்கே!

Philosophy Prabhakaran said...

சி மொழியை ரொம்பவே கரைச்சு குடிச்சிட்டீங்க போல...

பெசொவி said...

கம்பியூட்டர் காதல் என்பது இதுதானா?

காதல் ஒரு பெண் மீதா? இல்லை, கம்பியூட்டர் மொழி மீதா?
:)