Tuesday, January 18, 2011

ஆடுகளம் அயூப் பேசுறேன்

நான் அயூப்.பேட்டைக்காரனுக்கு தெரிஞ்சது எல்லாம் சேவல் சண்டை மட்டும் தான். இந்த நாப்பது வருசத்துல எனக்கு தெரிஞ்சது பேட்டைக்காரனும், சேவலுக்கு போடுற நரம்புத்தையலும் தான். பேட்டைக்காரனுக்கு சேவல்களைக் கணிக்கத் தெரியும்.எனக்கு மனுஷங்களை. சேவல் சண்டையே ஒரு போர் தான். காதலுக்காவும்,போருக்காவும் என்ன செய்தாலும் தப்பேயில்ல. காதல்னு சொன்னதும் தான் இது ஞாபகத்துக்கு வருது.பேட்டைக்காரனைக் சேவல் சண்டையில பாத்த ஒரு சின்ன வயசுப் பொண்ணு அவரையே கல்யாணம் பண்ணிக்கிச்சி. கொஞ்சம் கொஞ்சமா சின்ன வயசுப்பசங்களும் எங்களுக்கு அடுத்து வர ஆரம்பிச்சாங்க. குறிப்பா சொல்லணும்னா இரண்டு பேரு.

ஒருத்தன் கருப்பு. சேவலைக் கணிக்க தெரிஞ்ச அளவுக்கு மனுஷங்களைக் கணிக்க தெரியாதவன். இல்லன்னா காதலிக்கிறேன்னு சும்மா சொன்ன பொண்ணை நம்பி ரோட்டுல டப்பாக்கட்டையும் அவுத்துட்டு ஆடுவானா. ஆனா எங்க தட்டுனா யார் விழுங்காங்கன்னு பயலுக்குத் தெரியும். அவனையே நம்பியிருக்கிற அவன் ஆத்தா.

இன்னொருத்தன் துரை. கொஞ்ச வசதியுள்ளவன். இவனுக்கும் ஆளுங்களைக் கணிக்கத் தெரியாது. ஆனா துரோகம்னு தெரிஞ்சா கொல்லாம விட மாட்டான். உதவி செஞ்சா எதிராளினாலும் நட்பு பாராட்டுவான்.

எங்களுக்கு எதிரா ரத்தினம்.லோக்கல் இன்ஸ். சேவல் சண்டையில என்னைக்காவது எங்களை ஜெயிக்கலாம்னு எண்ணத்தை அவனுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே சொல்லி வளத்த அவன் ஆத்தா. அவன் அப்பன் அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் நேர்மையானவன்.

துரையால ரத்தினம் கிடா வெட்டுற இடத்துக்கு நான் போனேன். தண்ணியடிச்சேன். ஒரு பாட்டிலும் வாங்கிட்டுப் புறப்படலாம்னு பாத்தா பொண்ணு கல்யாணத்துக்கு வண்டி வாங்கித் தர்றேன்னு சொன்னதும் பாட்டில எறிஞ்சிட்டு வந்துட்டேன்.

வீட்டுக்கு சைக்கிள்ல வரும் போது லாரி இடிக்குறாப்ல வந்துச்சி. இடிக்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி தான் நினைச்சிக்கிட்டேன். பேட்டைக்காரனை நான் விட்டுட்டு வந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். ஆனா வேற மாதிரி.காரணம் ரத்தினம் எங்களுக்கு எதிரி. பேட்டைக்காரனை சொன்னதுக்கு எதிரா நடந்தாலே அவன் துரோகியா மாறிடுவான்.

டொப்னு ஒரு சத்தம்.அப்புறம் எனக்கு நினைவேயில்ல. என் பொண்டாட்டி பிள்ளைங்களை துரை,கருப்பு ரெண்டும் பேரும் பாத்துப்பாங்கன்னு நினைப்பே என்னை கொன்னுப் போட்டுரிச்சி.

லாரி நிக்கவேயில்ல.

7 comments:

THOPPITHOPPI said...

ரொம்ப நாளா ஆளையே காணோம்?

THOPPITHOPPI said...

நலமா?

இரும்புத்திரை said...

நலம்.கொஞ்சம் வேலை

Philosophy Prabhakaran said...

ஒண்ணுமே புரியல... ஒருவேளை ஆடுகளம் படம் பார்த்தவங்களுக்கு மட்டும்தான் புரியுமோ...

guru said...

ஒரு வித்தியாசமான படத்திற்கு வித்தியாசமான விமர்சனம்...

Vikram said...

interesting review.. i liked the film and the review...

தினேஷ் ராம் said...

:-))