Wednesday, January 5, 2011

2009 - சாரு புத்தக விழா

முதலில் விழாவைத் தொகுத்து வழங்க வருகிறார் நிர்மலா பெரியசாமி.

கீழிருந்து "ஒஜாரி ஒயே.." அப்படி சத்தம் வருகிறது.யார் என்று பார்த்தால் மதன்பாப் முதல் முறையாக புத்தகம் வெளியீடுவதால் அசத்தப் போவது யார் நிகழ்ச்சியில் இருந்து ஒரு குரூப் கோய் சூட்டோடு முதல் வரிசையில் அமர்ந்து இருக்கிறார்கள்.

"வணக்கம்ம்ம்ம்ம்ம்.." என்று நிர்மலா பெரியசாமி ஆரம்பித்தவுடன் சுதாரித்து கடைசி வரிசையில் பம்மி விடுகிறார்கள்.

"அது உஷா இல்லடா.." கோவை குணா சோகத்துடன் சொல்ல அதை கவனிக்காமல் கோட் பட்டனை சரி செய்து கொண்டு இருக்கிறார் மதுரை முத்து.

"வழக்கம் போல நான் தான் முதல்ல..ஆனா என்ன ஒரே ஒரு குறை சிட்டி பாபு சார் தான் வரலை..அவருக்கு பதிலா பத்து ஜட்ஜ்.."

"வந்துட்டாலும்..சனிக்கிழமை ஆனாலே இப்படி கிறுக்குப் பிடிச்சி திரியிறானே.." குணா சோகத்துடன் மேலே பார்க்கிறார்.

"முதலில் விழாவைத் தொகுத்து வழங்குபவர் மனுஷ்யபுத்திரன்.." நிர்மலா பெரியசாமி அறிவிக்கிறார்.

"என்ன அண்ணே என்ன கூப்பிடவே இல்ல..இவரு என்ன விட நல்லா காமெடி பண்ணுவாரா.." இப்படி முத்து புலம்பியது நின்று கொண்டு விழாவைப் பார்க்கும் நர்சிம் காதில் விழுகிறது.

"என்ணங்கள் எழுத வேண்டிய கையால அடிச்சேன் கன்னம் பழுத்துரும்..ஒரே ஊர்காரனா போயிட்ட..அதனாலா சும்மா விடுறேன்.." நர்சிம் கோபத்தில் திட்டுகிறார்.

"இங்கேயும் ஊர்பாசமா..இதே திண்டிவனம் காரன் சொல்லியிருந்தா சும்மா விடுவீங்களா.." என்று ஒரு வளரும் பதிவர் கேட்கிறார்.

"இப்படி சொன்ன உடனே பாம்பேயில இருக்கிறவனுக்கு மூக்கு வேர்த்துரும்..சும்மாவே பாய்ந்து வருவான்.." நர்சிம் சமாதானமாக சொல்கிறார்.

குஜராத் மண்ணின் மோடி மஸ்தான் கேபிளுக்கு போன் போடுகிறார்.சரியாக எஸ்.ராமகிருஷ்ணன் பேச வருகிறார்.கேபிள் ஸ்பீக்கரில் போடுகிறார்.

எஸ்.ராவின் குரல் கேட்கிறது - "மலாவி தேசத்திற்கு போகாமலே அதை விவரித்த பாங்கு அருமையானது.."

குஜராத் மோடி மஸ்தான் கத்துகிறார் - "இது என்ன பிரமாதம்..அவரு சிஷ்யன் இல்ல இப்படி சொன்னா தான் சரியா இருக்கும் அடியாள் ஒருத்தன் ட்ரெயிலர் பாத்தே விமர்சனம் பண்ணுவான்.."

வளரும் பதிவர் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.("இவங்க ஊர்காரர் அமீரை அடிச்ச கோபம்..அதனாலத் தான் இந்த விமர்சனம் வெப்பம்..இல்லன்னா ஒண்ணா தான் திரிவாணுங்க..வெளியில என்னமா நடிக்கிறாங்க..உலக நடிப்புடா சாமி..பாசத்துல மதுரை நெல்லையை விண் பண்ணிரும் போல..")

நர்சிம் மனதுக்குள் நினைத்து சிரிக்கிறார்.("மைன்ட் வாய்ஸ் இங்க வரை கேக்குது..விஜய்யை விட நல்லா நடிக்க முடியுமா..")

கேபிள் - "ஆமா நான் கூட சாருவின் சிஷ்யனா சேரப் போறேன்..அப்பத்தான் நானும் இந்த வாரம் அப்படி தான் விமர்சனம் எழுதணும்.வேட்டைக்காரன் படத்தை வேற பாக்கணுமா..இப்பவே கண்ணக் கட்டுதே.."

மோடி மஸ்தான் - "இங்க வரைக்கும் விஷயம் தெரியும் போல..இன்"ஷூ"ரன்ஸ் கூட தர மாட்டேன் சொல்லிட்டாங்க.."

கேபிள் - "இதுல போலீஸ்காரங்களை எல்லாம் அடிக்கிறாரு..நடக்கிற விஷயமா..ஆனா போக்கிரியில் இவர் போலீஸா நடிச்சா ஒரு அடி கூடப் படாது.."

வளரும் பதிவர் - "ஹலோ..அவர் தமிழன் படத்துல கூட போலீஸை அடித்து இருக்கார்..அப்பவே கேக்க வேண்டியது.."

கேபிள் - "இப்போ நான் ஐ.பி.எஸ்.காந்தி கொலை கேஸ் எல்லாம் நான் தான் விசாரிக்கிறேன்..இந்த பதிவை எழுதியவன் தான் எனக்கும் அந்த பட்டம் குடுத்தான்.."

இரும்புத்திரை - "அண்ணா உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா..பதிவை எழுதியது நைனா தான்னு.."

நைனா - "ரைட் விடு.."

நிர்மலா பெரியசாமி - "இப்பொழுது மதன்பாப் பேசுவார்.."

மதன்பாப் - "ஹி..ஹி..இவரு ரொம்ப நல்ல எழுத்தாளர்..ஹி..ஹி..வேரைட்டி தான் இவரோட ஸ்பெஷல்..ஹி..ஹி..எப்பவும் அப்டூ டேட்டா இருப்பார்.. ஹி..ஹி..அதுலையும் ஸ்டாண்டப்..ஹி..ஹி.."

நர்சிம் - "பாப்பூ வைக்காதீங்க ஆப்பு.."

மதன்பாப் - "சாரு தான் நாலு வரி பேச சொன்னாரு.."

மதுரை முத்து - "என்னை மட்டும் திட்டுனீங்களே..எங்க ஜட்ஜ் கூட சனிக்கிழமை ஞாபகத்தில் தான் இருக்குறாரு.."

ஒரு வழியாக வந்து உக்காருகிறார்.

மிஷ்கினிடம் மதன்பாப் - "எப்படி சார் என் பெர்ஃபார்மன்ஸ்.."

வண்டு முருகன் வடிவேலுவை ஜட்ஜ் ஒரு பார்வை பார்ப்பாரே.அது மாதிரி மிஷ்கின் பார்க்கிறார்.மதன் பாப் திரும்பி கொள்கிறார்.

கடைசியாக சாரு பேச வருகிறார்.

சாரு - "யோகி படத்தில் மதுமிதா லுங்கி அணிந்து இருந்தார்..மூலப்படத்திலும் அது மாதிரி தான் இருந்தது.அது அப்பட்டமான காப்பி..ஆனால் நந்தலாலா அப்படி இல்லை..அங்கு நாயகன் சாதாரண உடையில் இருந்தார்.இங்கு மிஷ்கின் காவலாளி உடையில் இருக்கிறார்.."

மதன்பாப் - "நான் அப்பவே சொன்னேன்..நீங்க தான் கவனிக்கல..அங்கப் பாருங்க..ஸ்டாண்டப் காமெடி எப்படி பிச்சி உதறுறாரு.."

மிஷ்கின் அதை கவனிக்காமல் - "இங்கிட்டு மிஷ்கின்..அங்கிட்டு கமல் சாரா.."

மதன்பாப் - "இது கெஸ்ட் அசத்துற நேரம்..உங்க முதல் ரெண்டு படத்தில் உள்ள குத்துப்பாட்டு தான் பேசப்பட்டதுன்னு நீங்களே சொன்னீங்க..என்ன பண்ணப் போறீங்க..ஆடப் போறீங்களா..இல்ல பாடப் போறீங்களா..இல்ல நடிச்சி அசத்தப் போறீங்களா.."

மிஷ்கின் - "நடிச்சு தான் அசத்தப் போறேன்.." சொல்லி விட்டு அஞ்சாதே படத்தில் வருவது மாதிரி அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார்.

கடைசி வரிசையில் இருந்து "ஒஜாரி ஒயே.." என்று சத்தம் வருகிறது.பதிவர்கள் குரூப் பாய்ந்து வந்து அசத்தப் போவது யார் அணியை அள்ளிச் சென்று நன்றாக "கவனிக்கிறார்கள்".

பார்ட்டியில் ஒருவர் சாருவிடம் வந்து "நீங்க இதுக்கு வடிவேலுவையோ இல்ல கவுண்டமணியையோ கூப்பிட்டுக் கொண்டு வந்து இருக்கலாம்.."

கேபிள் ஓடி வருகிறார் - "அப்ப நீங்க தான் _வுச்சியா.."

கேள்வி கேட்டவர் இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்து விடுகிறார்.

கேபிள் - "உங்களை விமர்சனம் செய்த _வுச்சி கூட உங்களுக்கு நல்லது செய்கிறார்..உங்க ஜால்ரா என்று சொல்லிக்கிட்டு மும்பையில் இருக்கிறவன் அது அவரு விழாவுக்கு வடிவேலு வரட்டும் என்று பதிவு போடுகிறான்..அவனை நம்பாதீங்க.."

தெலுங்கானா பிரிவை கேள்விப்பட்டு நைனாவிற்கு போன் செய்கிறார் இரும்புத்திரை.

இரும்புத்திரை - "நீங்க நெல்லைக்கு முதல்வரா..எனக்கு துணை முதல்வர் பதவியாவது குடுங்க.."

நைனா - "நீ சென்னை கேளு..புரியுதா வெண்ணை.."

இரும்புத்திரை - "சென்னை என் தல சாருவுக்கு.."

நைனா - "உனக்கு சென்னை வேணுமா..நான் சொல்ற மாதிரி கேளு..சாரு கிட்டப் போய் அடுத்த ஆண்டு புத்தக வெளியீடு விழாவுக்கு குமரிமுத்து தான் வரணும்னு அடம் பிடி.."

இரும்புத்திரை - "ஏன் என் குரு நாதருக்கு கூட்டம் சேர்ந்தா உனக்குப் பொறுக்காதே.."

நைனா - "நான் இதை வச்சு ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்..உன் ப்ளாக்குல நீயே போட்டுக்கோ.."

இரும்புத்திரை - "எப்படியோ ஹிட்ஸ் ஏறினா சரி.."

பதிவுப் போட்டப் பிறகு அதை படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்."யோவ் நைனா நீங்க அனுப்புறேன்னு சொன்ன வைரஸ் இது தானா..". பதிவை அழிக்க மறந்து மயங்கி விழுகிறார்.

நைனா - "வழக்கமா டிஸ்கி போடுவானே..நாம போடலையே..இத வைச்சே கண்டுப்பிடிச்சுருவாங்களே.."

மயங்கி கிடக்கும் இரும்புத்திரையை இழுத்து செல்கிறார் நைனா.எதுக்கு தெரியுமா பதுங்குக் குழியில் ஒரு மாமாங்கம் தங்கி ஒளிந்துக் கொள்ளத் தான்.

2 comments:

THOPPITHOPPI said...

சாருவின் தீவிர ரசிகரோ?

THOPPITHOPPI said...

நண்பரே என்ன ரொம்ப வேலை சுமையா வலையுலக பக்கமே காணோம்?

பொங்கல் வாழ்த்துக்கள்