Monday, May 31, 2010

நர்சிம் என்ன பாரதியும் அதே ஜாதி தான்

காமராஜின் பதிவின் ஆரம்பத்தில் பாரதியின் வரிகளோடு ஆரம்பித்தது.ஆனால் அவருக்கு தோதுபடும் வரிகளை மட்டும் அவர் எடுத்துக் கொண்டுள்ளார். எனக்கு எதிர்வினை செய்ய ஏற்ற வரிகள் இது தான்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா.." என்று அதே பாப்பான் பாரதி தான் சொன்னார்.பாண்டிச்சேரியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு பெயரே பாரதிதான்.அவர் எங்களில் ஒருவர் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.இதுவரை தெரியாத நர்சிமின் ஜாதியும்,சந்தன முல்லையின் ஜாதியும் இந்த பதிவின் மூலமாகத் தான் எல்லோருக்கும் தெரிந்தது என்பது காமராஜிற்கு இப்போதாவது தெரிந்தால் நான் கொஞ்சமாவது சந்தோசப்படுவேன்.

நர்சிமின் முகத்திரையைக் கிழிக்கிறேன் என்று சொல்லி கிழிக்க ஆரம்பித்த உடன் கூடவே மாதவராஜின் முகத்திரையும் சேர்ந்தே கிழிந்து விட்டது.பதிவில் சொல்லியிருக்கிறார்."அவன் இவன் என்பது இனி எந்த பதிவு எழுதினாலும் மாறாது என்று." பின்னூட்டத்தில் அது அந்த பதிவிற்கு மட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நர்சிம் பதிவை எடுத்து விட்டார்.அதற்கு காரணமான பதிவும்,பிற்கு வந்த எதிர்வினைகளும் இன்னும் துருப்பிடித்த இரும்பாக துருத்திக் கொண்டே தான் இருக்கிறது.

கார்க்கி - இவரோடு அரிதாகத்தான் நான் ஒத்துப் போவேன்.அப்படி ஒத்துப் போகும் இடங்களில் ஒன்று நர்சிம்.கக்கூஸ் என்று இவருக்கு அடைமொழி தந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.சாக்கடை புழுக்கள்,கக்கூஸ் என்று சொல்லி விட்டு ஏன் போன வருடத்தில் இருந்து குத்திக் கொண்டே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நர்சிம் புனைவில் வந்த வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டுயிருக்கிறார்.பதிவையும் நீக்கியிருக்கிறார்.நர்சிம் பாத்திரக் கொலை செய்தார் என்று வைத்து கொண்டாலும் கொலை செய்ய தூண்டியது யார்.மாதவராஜ் இதற்கு பதில் சொன்னால் நன்றாகயிருக்கும்.

விஜியின் பதிவில் - இந்த பதிவை நீக்குவதற்கா இங்கு கொண்டு வந்து போட்டோம் என்று சந்தனமுல்லை சொன்னது எங்க டாடி குதிரில் இல்லை என்று சொல்வது போலிருந்தது.இதற்கு காமராஜ் பதில் சொன்னால் நன்றாகயிருக்கும்.

எனக்கு கோபமெல்லாம் நர்சிம் மீது தான்.

உங்களுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை தான் நர்சிம்.

போன வருடம் குட் டச் பேட் டச் வெற்றிக்கு காரணம் தீபா தான் என்று உங்கள் பதிவில் புகழ்ந்தீர்கள்.ஜூலை மாதம் அதற்கு பரிசு கிடைத்தது.

டாக்டர் ஷாலினியைக் கிண்டல் செய்து வரிகள் லதானந்த் பதிவில் இருந்தது யாருமே கேட்கவில்லை.விஜி சொன்னார்.எதுவும் நடக்கவில்லை.நர்சிம் ஒரு கண்டனப் பதிவு எழுதினார்.அந்த வரிகள் நீக்கப்பட்டது.அதற்கு பின்னூட்டத்தில் கிண்டல் செய்தவர்களையும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பெண் பதிவர்களிடம் இருந்து கோரிக்கை வந்தது.அதர்கு கைமாறு உங்களுக்கு அதே விஜி மூலம் உங்களுக்கு கிடைத்ததா நர்சிம்.

எண்ணங்களில் அம்மாக்கள் வலைப்பூவில் சந்தனமுல்லையில் செயல்பாடு குறித்து பாராட்டியிருந்தார்.அதற்கு சேர்த்து டிவிட்டரில் இணைத்து தேரை தெருவில் விட்டார்களே.

டி.ஆர்.அஷோக் கண்டித்து நீங்கள் ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்.பெண்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் குரல் வேண்டும்.உங்கள் எழுத்து வேண்டும்.டி.ஆர்.அஷோக் யூ டூ நர்சிம் என்று வலியோடு கேட்டாலும் மன்னிப்பு கேட்டார் என்றால் அது உங்களுக்காக மட்டும் தானிருக்கும்.

தீண்டாமை ஒழிக்க சென்றதாக மாதவராஜ் சொன்னார்.முதலில் உங்கள் நண்பர் காமராஜிடம் இருக்கும் சாதி வேற்றுமை எண்ணத்தை ஒழியுங்கள் தோழரே.முதலில் வீடு அப்புறம் நாடு.இல்லையென்றால் ஊருக்கு உபதேசம் சொல்வது போல் ஆகி விடும்.

இனி எந்த பெண் பதிவர்களின் பங்களிப்பும் யாவரும் கேளிரில் வராது.உங்களுக்கு எதிர்வினை வராது.எழுதவே போவதில்லை என்று சொல்லி விட்டீர்களே நர்சிம்.

நர்சிமின் முகத்திரையை கிழிக்கிறேன் என்று யாரும் உங்கள் முகத்திரையையும் கிழித்து கொள்ள வேண்டாம்.உங்களுக்கு தோதான வரிகளை சொல்லாமலிருந்தால் பாரதியையும் பாப்பான் என்றே சொல்லியிருப்பீர்கள்.

9 comments:

இரும்புத்திரை said...

என் வலைப்பூவில் இருந்து எந்தனை பாலோயர் ஓடினாலும் இப்படித்தான் எழுதுவேன்.இன்னமும் யாராவது ஓடுவதாயிருந்தால் ஓடுவதற்கு முன் தமிழ்மணத்தில் சேர்த்து விடவும் .இதுவும் கிடந்தது நாறட்டும்.

மங்களூர் சிவா said...

/
தமிழ்மணத்தில் சேர்த்து விடவும் .இதுவும் கிடந்தது நாறட்டும்.
/

:)

கார்க்கிபவா said...

நன்றி சகா..

உரிமைகளில் மட்டும்தான் பெண்களுக்கு சம உரிமையா? திட்டும்போதும் அவரை ஆணா பெண்ணா என்று பார்த்து திட்டவில்லை. சகபதிவராக மட்டுமே பார்த்தோம். இந்த காமராஜ் கண்ணுக்குதான் முல்லை பிறபடுத்தபட்ட பெண்னாக தெரிகிறார்.

இந்த பிரச்சினையும் கடந்து போகும். ஆனால் இப்படிப்பட்ட ஆட்களின் எண்ணம் அவர்கள் வாழ்க்கையே அழித்துவிடும்.. இதில் இவர்கள் பதிவுலகை காக்க வந்த கடவுள்களாம்..

Unknown said...

நிகழ்ந்த சம்பவங்களுக்குச் சாதிச்சாயம் பூசுவது என்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், சந்தனமுல்லை-நர்சிம் இருவர் செய்ததையும் கண்டிப்பதோடு.

Unknown said...

//உரிமைகளில் மட்டும்தான் பெண்களுக்கு சம உரிமையா? திட்டும்போதும் அவரை ஆணா பெண்ணா என்று பார்த்து திட்டவில்லை//

இந்தியாவில் மட்டுமல்ல கார்க்கி. உலகம் முழுதுமே இப்படிச் செய்ய இயலாது.

நன்றாக இருக்கும் ஒருவனைக் கிண்டல் செய்வதற்கும், மாற்றுத் திறனாளன் ஒருவனக் கேலி செய்வதற்கும் உள்ள வித்தியாசமே அது.

Anonymous said...

டாக்டர் ஷாலினியைக் கிண்டல் செய்து வரிகள் லதானந்த் பதிவில் இருந்தது யாருமே கேட்கவில்லை.விஜி சொன்னார்.எதுவும் நடக்கவில்லை.நர்சிம் ஒரு கண்டனப் பதிவு எழுதினார்.அந்த வரிகள் நீக்கப்பட்டது.அதற்கு பின்னூட்டத்தில் கிண்டல் செய்தவர்களையும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பெண் பதிவர்களிடம் இருந்து கோரிக்கை வந்தது.அதர்கு கைமாறு உங்களுக்கு அதே விஜி மூலம் உங்களுக்கு கிடைத்ததா நர்சிம்.//

லதானந்த் பதிவில் நான் முதல் பின்னூட்டம் இட்டது சரிதான். ஆனால் நான் சொல்லி நர்சிம் அந்த பதிவு எழுதவில்லை. ஏனெனில் நர்சிம் எனக்கு யாரென்றே தெரியாது அப்போது. அதனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவேண்டாம்.

இரும்புத்திரை said...

மயில்

மீண்டும் பதிவை நன்றாக படித்து பார்க்கவும்.நீங்கள் சொல்லி நர்சிம் எழுதினார் என்று சொல்லியிருக்கிறேனா ?

நீங்கள் பதிவர் லதானந்த் பதிவை எடுக்க வேண்டும் பதிவு எழுதினீர்கள்.ஒன்றும் நடக்கவில்லை.பிறகு "யாரும் சொல்லாமல்" நர்சிம் எழுதினார்.இப்படி படிப்பவர்களுக்கு அர்த்தம் புரியாமல் எழுதியதற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

நீங்கள் லதானந்த் பதிவில் கும்மி அடித்தவர்களையும் கேள்வி கேட்ட வேண்டும் என்று சொல்லவில்லையா?.

பாருங்கள் எனக்கு எந்த சமயத்தில் பின்னூட்டத்தை மெயில் பெறும் வசதி தெரியாமல் போய் விட்டது.

அப்படியில்லாமலிருந்தால் மன்னித்து விடவும்.

இரும்புத்திரை said...

மயில்

http://lathananthpakkam.blogspot.com/2009/06/blog-post_18.html

இப்போ ஞாபகம் வருகிறது அபி அப்பாவையும் கண்டிக்க வேணும் என்று சொன்னது யார்.கொஞ்சம் பிளாஷ்பேக் எடுத்து பார்க்கலாம் என்றால் நர்சிம் அந்த பதிவை எடுத்து விட்டார்.

அட இதுவும் நடந்தது தெரியாமல் உளறி விட்டேன் போலும்.

இரும்புத்திரை said...

மயில்,

இதுவரை அந்த பதிவை நீங்கள் தான் எழுதியதாக நம்பிக் கொண்டிருந்தேன்.இன்றைய பதிவை படித்தததும் சாரி.அதே கதை தான் ஞாபகம் வருகிறது.எங்க டாடி குதிருக்குள் இல்லை.