Tuesday, September 14, 2010

பாஸ் என்ற பாஸ்கரன்

பாஸ் என்ற பாஸ்கரன் படம் பார்த்தேன்.ஹீரோ என்றால் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தில் ஒரு காட்சி.நயன் தாரா ஆர்யாவிடம் பாடன் பாடன் என்று கேட்பார். ஆர்யா அதற்கு பாட்டு பாடுவார்.இந்த காட்சி என் பதிவை அந்த படம் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் படித்திருக்கிறார் என்று சொல்ல மாட்டேன்.யாருடைய கல்லூரி வாழ்விலோ அப்படி நடந்திருக்கலாம்.

இனி கொசுவர்த்தி..

நான் பொதுவா கல்லூரியில் படிக்கும் போது(செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து) இரண்டு காரியங்கள் மட்டுமே செய்வேன்.வேடிக்கைப் பார்ப்பது மற்றும் தூங்குவது.ஆட் செமஸ்டர்(1,3,5,7) நடக்கும் போது வெளியே இருக்கும் வயல்களில் நாத்து நட்டிருப்பார்கள்.பசுமையாக இருப்பதால் வேடிக்கை பார்பதற்கே நேரம் போதாது.ஈவன் செமஸ்டரில்(2,4,6,8) தூங்கி வழிவேன்.

நாங்கள் கடைசி செமஸ்டர் படிக்கும் சமயம் இன்னொரு நண்பன் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தான்.ஒரு குறும்படம் எடுக்க ஒரு கதை தேவை என்று சொல்லியிருந்தான்.கதை விவாதம் அனல் பறந்து கொண்டிருந்தது.வழக்கம் போல நான் தூங்கி மகிழ்தேன்.(என்னை எழுப்பாமல் விட்டதற்கு காரணம்இது போல ஒரு கதை கேட்ட நண்பனிடம் கிழக்கே போகும் ரயில் படத்தை உல்டா செய்திருந்தேன்.அன்று எழுந்த கோபம் தான் காரணம்)

கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பி கதை கேட்டான்.(திருந்தியிருப்பேன் என்று தவறாக நினைத்த விட்டான்).நானாவது.. திருந்துவதாவது.. கதை சொல்ல ஆரம்பித்தேன்.

"மச்சான் நாடகத்திலே மொக்கை மாதிரி டிவிஸ்ட் வைக்கிறான்.நான் சொல்ற கதையிலே அவங்கள மிஞ்சிறேன் பாரு.."

"டேய் ஓவராப் பேசாத..கதைய சொல்லு.."

"பைக்ல புதுப் பொண்டாட்டி கூட வேகமா போறான்.ஒரு திருப்பத்துல எதிரே வண்டி வர்றது தெரியாம மோதி கீழ விழுகிறான்.கோவத்திலே எந்திரிச்சி திட்டப் போறான்..அப்பத்தான் கவனிக்கிறான்.வந்து மோதின பைக்லகையும் ஒரு ஜோடி இருக்கு.அத பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான்..நாலு பேரும் அதிர்ச்சி அடையிறான்க.." என்று சொன்னேன்.

"குமுதத்தில வர்ற கதை மாதிரியே இருக்கு..கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடி மாறி போச்சா.." என்று சொன்னவனிடம்

"இல்ல நாறி போச்சு..இங்க தான் நாம கத்துக்கிட்ட எடிட்டிங் திறமைய காட்டுறோம்..ஆண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..அடுத்த ஷாட்டுல அந்த பெண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..யாருக்கு யார் கூடத் தொடர்பு அப்படி தெரியாம பாக்குறவன் எல்லாம் தலையப் பிச்சிக்கிட்டு சாவான் " என்று சொல்லி முடித்தவுடன்

"போடா ப..அவன காலேஜ்ல இருந்து தூக்குறதுக்கு வழி சொல்றியா.." என்று என்னை திட்டிக் கொண்டியிருந்தான்.

எல்லோரும் சிரித்துக் கொண்டோம்.(நான் சொன்னத்தில் கடைசியில் தலைப்பு மட்டும் தான் மிஞ்சியது. தலைப்பு - கோணங்கள்.)

வினையே இதுக்கு அப்புறம் தான் ஆரம்பித்தது.பாடம் நடத்திய லேடி புரபசருக்கும் எங்களுக்கும் ஆகாது.

"சம்படி இஸ் கிகிளிங்.." என்று அவர் சொல்ல

"லாபிங்னா சிரிக்கிறது கிகிளிங்னா என்னடா மச்சான்.." என்று ஒரு நண்பன் கேட்க

"பல்ல இளிக்கிறது.." என்று இன்னொரு நண்பன் சொல்ல

"அரவிந்த் வாட் இஸ் ஜெ-ப்ரோடோ.."

"என்னடா இது மாதிரி ஒரு புரோட்டோவ நான் கேள்வி பட்டதே இல்லை.." என்று நான் வாய்க்குள்ளே முணுமுணுத்தேன்

"பாடன்.."

"பாடணுமா..எனக்கு பாடத் தெரியாதே.." இப்படி சொன்னது புரபசரின் காதில் விழுந்து தொலைத்தது.

"ஹவ் அடமென்ட் யூ ஆர்.." என்று திட்ட ஆரம்பிக்க

"என்ன அடம் பிடிக்கிரம்மா.." என்று துணைக்கு ஒரு நண்பன் சொல்ல..உடனே எம் மேல் இருந்த கோபத்தை அவன் மேல் காட்ட ஆரம்பித்தார்.

"ஐ வில் ஆஸ்க் சேர்மன் டு கிவ் எ ஷூ.." என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

"மச்சான் நீ செருப்பு போட்டுக்கிட்டு வர்றது பிடிக்காம அவங்க சேர்மன் கிட்ட சொல்லி ஷூ வாங்கி தர்றாங்களாம்.." என்று ஒரு நண்பன் மொழிபெயர்க்க

"செருப்பால அடி வாங்கி தர்றேன்னு சொல்லுதுடா.." - இது நான்

"அந்த அஞ்சு பேரும் வெளிய போங்க.." என்று அவர் தமிழுக்கு தாவியப் பிறகு வெளியே வந்தோம்.

வாசல் பக்கம் தான் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள்.பக்கத்து வகுப்பு பெண்களையும் கவனிக்கலாம்.என்னுடைய நெருங்கிய நட்பு ஒன்று துண்டுச்சீட்டில் எழுதி அனுப்பியது.

"க்ளாஸ்ல துங்குற..அசைன்மென்ட் குடுத்தா எழுதறது இல்ல..நான் எழுதி குடுத்தாலும் வாங்குறது இல்ல..முழிக்கிற நேரம் எல்லாம் அரட்டை..முதல்ல அந்த பசங்க கூட சேர்றத நிறுத்து.."

"டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன்.

5 comments:

நீ தொடு வானம் said...

இப்போ அந்த பொண்ணை யார்னு தேடி அடுத்த கேஸ் போடப் போறாங்களாம்.ஏன் நீங்க ஆணாதிக்கவாதி மாதிரி தொடர்ந்து காட்டனுமா.

இரும்புத்திரை said...

கண்டுப்பிடிக்க எந்த சொம்பு உருண்டு வருதுன்னு நானும் பாக்குறேன்.

மார்கண்டேயன் said...

ரொம்ப ரசிச்சு சிரிச்சேங்க . . . எப்பிடிங்க, இப்டி, ரொம்ப நாளுக்கப்பறம்,

"டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கொட்டை எழுத்தில்

ஆயிரம் இருந்தாலும், ஒரு 'பெண்' பேராசிரியை (?!!), 'பெண்' நண்பியை (??!!?) அவமானப்படுத்தியது, உதாசீனப்படுத்தியது ஆணாதிக்கத்தின் உச்ச கட்டம் . . .

'வகுப்பறைகளில் ஆணாதிக்கம்',

இதற்கு, நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் . . .

ஏதோ நம்மளால முடிஞ்சது . . .

ராவணன் said...

நான் போன மாசம்தான் தாய்லாந்து சென்று வந்தேன்.(சும்மா)
எல்லாம் மாறனும்...இல்ல மாத்தனும்..எந்திரன் ரஜினிபோல..
எந்திரனைப் பார்க்கவேண்டாம்...
ரஜினிபடம் மட்டும் பாருங்கள்.

Unknown said...

எந்திரனைப் புறக்கணிப்போம்...