Monday, September 13, 2010

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மன்னிப்பு

//எஸ்கீமோக்களிடம் லட்டு விற்க முயற்சித்து கொண்டிருந்தான்.//

எஸ்கீமோக்கள் என்று சொல்லக்கூடாதாம்.அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//வால்பையன் சொன்னது போல் ஐஸ்கீரிம் விற்றியிருக்கலாம். அதை நாய்க்கு எறிந்து ஒரு தமிழ்ப் பிளாக்கனை அசிங்கப்படுத்துகிறார்கள். வெறுத்து போய் ஆப்பிரிக்காவில் அதே லட்டை விற்க முயற்சித்தேன். பூந்தியாக உதிர்த்து தர வேண்டும் அடம் பிடிக்கிறார்கள். உதிர்ப்பதா தமிழ்ப்பிளாக்கனுக்கு வேலை. தமிழ் சமூகத்தில் ஒரு ப்ளாக்கனுக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா.திரும்பவும் அலாஸ்கா,எஸ்கீமோ,லட்டு. திரும்பவும் வால்பையன் வந்து தமிழ்ப்பிளாக்கனைச் செருப்பால் அடித்தால் திருந்து விடுவான் என்று டிவிட்டீனார்.//

என்றாவது நானும் வால்பையனும் சேர்ந்து சரக்கடிக்கும் போது ஒரு சொட்டு கூடக்குறைய வந்து அதற்கு இந்த பத்தி தான் காரணமாகயிருக்கும் என்றால் வால்பையனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//பலா பட்டறை வந்து செஷல்ஸ் தீவில் கலஹாரி இலக்கியம் படிக்க வர சொன்னார்.//

என்றாவது அவர் கவிதையை நான் மொக்கை என்று சொல்வதற்கும் இந்த வரிக்கும் சம்பந்தமிருப்பதாக இருந்தால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

//ஒரு போர்டில் எதையோ எழுதி முகிலன் அவர் கடையில் வைத்து விட்டார்.//

நான் எந்திரனைப் புறக்கணித்து அதனால் எந்திரன் ஓடாமல் போனதற்கு இந்த வரி தான் காரணம் என்று முகிலன் நினைத்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//பஸ்ஸில் அவன் கும்மியடிக்க செஷல்ஸ் தீவிற்கு போகவிருந்த டெல்டா நாதன் அவனுக்கு எதிர்வினை வைக்க பஸ் ஓனர் கடுப்பாகி இருவர் காதையும் பிடித்துக் கிள்ளி நீங்கள் வைத்ததை,எடுத்ததை எழுதியதை,பேசியதை நீங்களே எடுங்கள் என்று சொல்லி ஓடும் பஸ்ஸிலிருந்து இறக்கி விட முதலில் டெல்டா நாதன் கீழே விழ தமிழ்ப்பிளாக்கன் அவருக்கு மேல் விழ அவர் அடிப்பட்டு மயங்கி விட்டார்.தனியே செஷல்ஸ் தீவிற்கு போய் சேர்ந்தான் தமிழ்ப்பிளாக்கன்.//

அதுசரி அவர் பெயரில் ப்ளாக்கர் எண்ணை சேர்த்து கொண்டதற்கு காரணம் கேட்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தமிருந்தால் அது சரியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

// சுஜாதா இறந்து மூன்று வருடம் ஆனப்பிறகு அவரை விமர்சிக்கும் அகில உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டியப்பன் யார் தளத்தில் போய் சினிமா விமர்சனம் படிப்பார்.அதனால் தான் இந்த உறுதிமொழி. சுஜாதாவும் மிஞ்சும் விஞ்ஞானச்சிறுகதை அவர் இன்னும் ஆயிரம் வருடத்தில் எழுதி விடுவார் என்பதால் அவரை ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டான்.//

சுஜாதாவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.அகில உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டியப்பனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.காரணம் எல்லாம் சொல்ல முடியாது.

//தற்போது மல்லையா மொழியில் காவியம் எழுதிக் கொண்டியிருக்கிறான். முகிலனின் பதிவைப் பார்த்ததும் தான் தெரிந்து கொண்டான்//

இதில் மல்லையா என்று வந்ததால் எனக்கு கிங்பிஷர் சரக்கு கிடைக்காமல் போய் விட வாய்ப்பிருப்பதால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

// அலாஸ்காவிற்கு பயணப்பட்டான். விமானத்தின் பக்கத்து இருக்கையில் அனுஷ்கா.//

என்றாவது நான் உலகப்புகழ் பெற்று பிறகு அனுஷ்காவிற்கு இந்த விஷயம் தெரிந்து என்னிடம் வம்பிழுத்தால் அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//அனுஷ்கா வரப்போவது ஏற்கனவே தெரிந்திருந்ததால் சிங்கம் சூர்யாவிடம் திருடியிருந்த ஷூவைப் போட்டுக் கொண்டு அவள் கவனம் காலுக்குப் போகாமல் அனுஷ்காவை விட உயரமாக நின்று பேசிக் கொண்டிருந்தான்.//

ரத்தச்சரித்திரம் நான் புறக்கணிக்கப் போவதால் அதற்கு இதை காரணம் காட்டி சூர்யா வம்பிழுத்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இன்று சல்மான் கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.பணக்காரர்கள் இறந்த காரணத்தால் தாஜ் ஹோட்டம் சம்பவம் பெரிதாக பேசப்பட்டது.ஏழை இறந்திருந்தால் இருக்காது என்று சொல்லியிருக்கிறார்.உண்மை தான் அந்த தாக்குதல் சமயம் சல்மான் கான் சிக்கியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.அதற்காக நான் அவரை சாக சொன்னேன் என்று சொல்லி விட வேண்டாம்.

என்னுடைய கருத்தால் தான் கத்ரீனா கைப் பிரிந்தார் என்று சல்மான் நினைத்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.கத்ரீனாவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

அவுரங்கசீப் ஹீரோ என்று எப்போழுதோ எழுதியிருந்தேன்.அதனால் கனவில் என்னை எப்படி இப்படி சொல்லலாம் என்று மிரட்டும் அவுரங்கசீப்பிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//தமிழ்ப்பிளாக்கன் அலாஸ்காவில் எஸ்கீமோக்களிடம் லட்டு விற்க முயற்சித்து கொண்டிருந்தான்.யாரும் சீண்டுவதாக தெரியவில்லை.//

எல்லோரும் தமிழில் தான் ப்ளாக் எழுதுகிறோம்.பத்து வருடங்கள் கழித்து வரும் தமிழ் பதிவர் யாராவது என்னைத்தான் தமிழ்ப்பிளாக்கன் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது.

நான் என்னை மட்டும் தான் தமிழ்ப்பிளாக்கன் என்று சொல்லிக் கொண்டேன்.அதனால் என்னிடம் நானே மன்னிப்பு கேட்குக் கொள்கிறேன்.

இன்னும் யாராவது இருந்தால் சொல்லி விடுங்கள்.மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.அப்புறம் இரும்புத்திரை கேட்கவில்லை என்று சொல்லக்கூடாது.ஏன்னா நான் மிருதங்கம் கத்துக்கப் போறேன்.

அப்படியும் வருபவர்கள் மிருதங்க வகுப்பு முடியும் வரை இதை பார்த்து ரசிக்கவும்.வகுப்பு முடிஞ்சதும் மிச்சத்தை வைத்து கொள்ளலாம்.

8 comments:

? said...

வாழ்த்துக்கள். நன்றாக எழுதுவதற்காக‌

மார்கண்டேயன் said...

எப்டிங்க, இப்டி . . . !!!,
வாங்க பாஸு, நம்ம கட பக்கம் வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்க,
(சாமி, இதுக்கொரு பதிவ போட்ராதீங்கப்பு)

நீ தொடு வானம் said...

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி.

மன்னிப்பு மிச்சம் இருக்கிறது தோழர்கள் கிட்ட மட்டும் தான்.ஏன் ஒரவஞ்சனை.

வால்பையன் said...

என்ன கைய புடிச்சி இழுத்தியா!

வால்பையன் said...

நானும் எல்லாத்தாண்டையும் மன்னிப்பு கேட்டுகிறேன்!

எதுக்குன்னா, என்னைக்காவது புனைவு, கினைவு எழுதி தொலைச்சிட்டா

அதுக்கு தான்!

அபி அப்பா said...

எனக்கு சுண்டல்!

ராவணன் said...

டீ வந்துச்சா? இல்லை காப்பியா?
என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அதனால் ஒப்புக்கொள்ள இயலாது.

பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல்..
வினவு கும்பலை அடிக்கவேண்டுமானால் அந்த மருதையனை அடிக்க வேண்டும்..பின்னர் அந்த வினவு கும்பல் முன்னாடியும் பின்னாடியும் மூடிக்கொண்டு ஓடிவிடுவார்கள்...
எங்கடா அந்த மருதையய்யன்?...
ஏழரையோ ..இல்லை எட்டரையோ
இல்லை .. ஒரு ஒம்போதோ வருவார்கள்..

pichaikaaran said...

என்னிடமும் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எதற்கா? அதெல்லாம் தெரியாது..
எல்லொரிடமும் மன்னிப்பு கேட்பதை பார்த்தால் அவர்கள் மேல் பொறாமையாக இருக்கிறது... என்னிடமும் தயவு செய்து மன்னிப்பு கேட்கவும் !!!